ஐபிஎல் தொடரில் கடந்த 28-ம் தேதி நடைபெற்ற சென்னை அணிக்கு எதிரான போட்டியில் ஹைதராபாத் அணியின் கேப்டன் வார்னர் அணிந்த ஷூ, சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ஐபிஎல் தொடரில் கடந்த 28-ம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதியது. டெல்லி நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி, 3 விக்கெட் இழப்புக்கு 171 ரன்களை எடுத்தது. இதில் அதிகபட்சமாக மனிஷ் பாண்டே 61 ரன்களும், டேவிட் வார்னர் 57 ரன்களும் அடித்தனர். அதனைதொடர்ந்து பேட்டிங் செய்த சென்னை அணி, 18.3 ஓவர்களில் 173 ரன்கள் அடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பெற்றுள்ளது.
இந்த ஹைதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் அணிந்திருந்த ஷூ, தற்பொழுது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த ஷூவில் அவரது மனைவி மற்றும் குழந்தைகளின் பெயர் பதிக்கப்பட்டு இருந்தது. இதனை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் வார்னரின் மனைவி பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில் அவர், “இந்த உலகில் எங்கிருந்தாலும், நாங்கள் எப்போது உங்களுடனே இருப்போம்” என்று தனது கருத்தை பதிவிட்டுள்ளார். இந்த பதிவு, தற்பொழுது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வரும் நிலையில், தான் ஒரு சிறந்த கணவர் மற்றும் அப்பா என்பதை வார்னர் நிரூபித்துள்ளார்.
ஸ்ரீநகர் : காஷ்மீரில் நேற்று அனந்த்நாக் மாவட்டம் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.…
ஹைதராபாத் : ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் நேற்றைய தினம் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக,…
ஸ்ரீநகர் : ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்தில் பஹல்காம் பகுதியில் நடந்த தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு…
டெல்லி : நேற்று ( ஏப்ரல் 22) காஷ்மீர் பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம்…
புதுச்சேரி : சிஎஸ்கே அணியின் தொடர் தோல்வி குறித்து கருத்து தெரிவித்த அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் வரும்…
டெல்லி : நேற்று (ஏப்ரல் 22) பிற்பகல் 3 மணியளவில் ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில்…