தயவுசெய்து மக்கள் பாதுகாப்பாக இருங்கள். இந்த நேரம் கடக்கும் ஆனால் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று கிரிக்கெட் வீரர் கெவின் பீட்டர்சன் ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா 2 வது அலையின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், கொரோனா பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த ஆண்டை போல் இந்த ஆண்டும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் பாதிப்பக்கப்பட்டு வருகின்றார்கள். கிரிக்கெட் வீரர்கள் சிலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வந்த காரணமாக நடப்பாண்டு ஐபிஎல் தொடர் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் வீரர்கள் அனைவரும் தனது சொந்த நாட்டிற்கு திரும்பி சென்றனர்.
மேலும் பல சினிமா பிரபலங்கள் , கிரிக்கெட் வீரர்கள் தங்களால் முடிந்த உதவியை இந்தியாவின் மருத்துவ உதவிக்கு கொடுத்து வருகிறார்கள். மேலும் சிலர் அறிவுரை கூறிவருகின்றார்கள். அந்த வகையில் தென்னாபிரிக்கா அணியின் கிரிக்கெட் வீரர் கெவின் பீட்டர்சன் தனது அறிவுரையை ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இதில் ” நான் இந்தியாவை விட்டு வெளியேறியிருக்கலாம், ஆனால் எனக்கு நிறைய அன்பையும் பாசத்தையும் கொடுத்த நம் இந்திய நாட்டைப் பற்றி நான் இன்னும் நினைத்துக்கொண்டிருக்கிறேன். தயவுசெய்து மக்கள் பாதுகாப்பாக இருங்கள். இந்த கடினமான சூழ்நிலை கண்டிப்பாக கடக்கும் ஆனால் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : சேலம் மாவட்ட சரித்திர பதிவேடு குற்றவாளி ரவுடி ஜான் எனும் சாணக்யாவை மர்ம கும்பல் ஒன்று இன்று அவரது…
சென்னை : சூர்யா ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் தனியாக ஒரு படத்தில் நடிக்க எந்த அளவுக்கு எதிர்பார்ப்பு இருக்கிறதோ அதே அளவுக்கு அவர்…
மேற்கு வங்கம் : ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு ஆய்வு பணிகளுக்காக இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க விண்வெளி…
பஞ்சாப் : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் வரும் மார்ச் 22-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ள நிலையில், போட்டியில் விளையாடும் அணிகள்…
டெல்லி : இந்த வருட ஐபிஎல் (IPL 2025) திருவிழா வரும் மார்ச் 22ஆம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன்…
சென்னை : டாஸ்மாக் டெண்டர்களில் சுமார் ரூ.1000 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறப்பட்ட நிலையில் அதற்கு பொறுப்பேற்று அமைச்சர் செந்தில் பாலாஜி…