ஐபிஎல் 2024 : வெற்றிக்கு பிறகு ரிஷப் பண்ட்டுக்கு அபராதம் ..!! ஏன் தெரியுமா ?

Published by
அகில் R

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் நேற்றைய போட்டியில் டெல்லி அணி வெற்றிக்கு பிறகு, டெல்லி அணியின் கேப்டனான ரிஷப் பண்ட்டுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் நேற்றைய போட்டியில் டெல்லி அணி சென்னை அணியை 20 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்த போட்டியில் டெல்லி அணியின் கேப்டனான ரிஷப் பண்ட் அட்டகாசமாக விளையாடி அரை சதம் அடித்து வெற்றிக்கான முக்கிய காரணமாக திகழ்ந்தார். அவர் சிறப்பாக விளையாடி, 32 பந்துகளில் 3 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன்  51 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

அதன் பிறகு டெல்லி அணியின் பந்து வீச்சு சிறப்பாக அமைந்தது, இதன் மூலம் டெல்லி அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்த ஐபிஎல் தொடரின் முதல் வெற்றியை பதிவு செய்தது. இந்த வெற்றிக்கு பிறகு ஐபிஎல் நடத்தை விதிகளை (IPL Code of Conduct) மீறி செயல்பட்டதாக கூறி டெல்லி அணியின் கேப்டன் பண்ட்டுக்கு ரூ.12 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய போட்டியில் சென்னை அணியின் பேட்டிங் செய்யும் போது டெல்லி அணி வீரர்கள் மெதுவாக ஓவர்களை வீசினார்கள். ஐபிஎல்லில் குறிப்பிட்ட நேரத்திற்குள், பந்து வீசும் அணி பந்து வீசி முடிக்க வேண்டும் இல்லை என்றால் கடைசி ஓவரில் 30-யார்ட் சர்க்கிளுக்கு (30 Yard Circle) வெளியில் 4 ஃபீல்டர்கள் மட்டுமே நிற்க வேண்டும் என்பது விதி.

இந்த போட்டியில் இதை செய்ய தவறிய டெல்லி அணியின் கேப்டனான பண்ட்டுக்கு, ஐபிஎல் நடத்தை விதிகளை மீறியதன் பெயரில் தற்போது ரூ.12 லட்சம் அபராதமாக விதித்துள்ளது பிசிசிஐ நிறுவனம்.

Recent Posts

ரியல் ஹீரோ., பஹல்காம் தாக்குதலில் மக்களை காப்பாற்ற உயிர் விட்ட இஸ்லாமிய தொழிலாளி!

ஸ்ரீநகர் : காஷ்மீரில் நேற்று அனந்த்நாக் மாவட்டம் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.…

9 minutes ago

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல்: இன்றைய ஐபிஎல் போட்டியில் கொண்டாட்டத்துக்கு தடை..!

ஹைதராபாத் : ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் நேற்றைய தினம் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக,…

41 minutes ago

பயங்கரவாத தாக்குதல்., காயமடைந்தவர்களை நேரில் சந்தித்த அமித்ஷா!

ஸ்ரீநகர் : ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்தில் பஹல்காம் பகுதியில் நடந்த தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு…

50 minutes ago

காஷ்மீரில் இருந்து வெளியேறும் சுற்றுலா பயணிகள்., விமான சேவை அதிகரிப்பு! தமிழர்கள் நிலை என்ன?

டெல்லி : நேற்று ( ஏப்ரல் 22) காஷ்மீர் பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம்…

2 hours ago

“இந்த சீசன் சென்னை சரியா ஆடல என்பது உண்மைதான்” – சிஎஸ்கே CEO காசி விஸ்வநாதன்.!

புதுச்சேரி : சிஎஸ்கே அணியின் தொடர் தோல்வி குறித்து கருத்து தெரிவித்த அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் வரும்…

2 hours ago

காஷ்மீர் தாக்குதல் எதிரொலி., உங்கள் பாதையே வேண்டாம்! பாகிஸ்தானை தவிர்த்த பிரதமர் மோடி!

டெல்லி : நேற்று (ஏப்ரல் 22) பிற்பகல் 3 மணியளவில் ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில்…

3 hours ago