பஞ்சாப் கிரிக்கெட் அசோசியேஷன் யுவராஜ் சிங்கை மீண்டும் மாநில கிரிக்கெட் அணிக்கு வர அழைப்பு விடுத்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவராக திகழ்ந்தவர் முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங். 2007 டி20 மற்றும் 2011 ஒருநாள் உலகக்கோப்பை போட்டிகளில் சிறப்பான பங்களிப்பை இந்திய கிரிக்கெட் அணிக்கு கொடுத்தவர் யுவராஜ் சிங்.
இவர் கடந்தாண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இந்த செய்தி கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சிகுள்ளாக்கியது.
தற்போது, பஞ்சாப் கிரிக்கெட் அசோசியேஷன் அவரை மீண்டும் மாநில கிரிக்கெட் அணிக்கு வர அழைப்பு விடுத்துள்ளது. இது குறித்து, பஞ்சாப் மாநில அசோசியேஷன் சார்பில் தெரிவிக்கையில், ‘ சில நாட்களுக்கு முன்னர் யுவராஜ் சிங்கிற்கு PCA சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவர் மீண்டும் அணிக்கு கிரிக்கெட் வீரராகவும், ஆலோசகராகவும் வர வேண்டும்.’ என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாம். இது குறித்து யுவராஜ் சிங் தான் முடிவு எடுக்க வேண்டும் என கூறப்படுகிறது.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…