#IPL2022: லிவிங்ஸ்டன் அதிரடி.. 5 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றி!

Default Image

ஐபிஎல் தொடரில் இன்று நடைபோட கடைசி லீக் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தோல்வியை சந்தித்தது.

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 70-வது மற்றும் கடைசி லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதியது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பேட்டிங்கை தேர்வு செய்ய, அதன்படி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் எடுத்தது. 158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜானி பரஸ்ட்டோ – தவான் களமிறங்கினார்கள்.

இதில் அதிரடியாக ஆடிவந்த ஜானி பர்ஸ்டோ 23 ரன்கள் எடுத்து தனது விக்கெட்டை இழக்க, அவரைதொடர்ந்து களமிறங்கிய ஷாருக் கான் 19 ரன்களுக்கும், மறுமுனையில் சிறப்பாக ஆடிவந்த தவான் 39 ரன்கள் எடுத்து வெளியேற, பின்னர் களமிறங்கிய லிவிங்ஸ்டன் அதிரடியாக ஆடி 49 ரன்கள் குவித்து அணியை வெற்றிபெற செய்துள்ளார். இறுதியாக அதிரடியாக ஆடிய ஜிதேஷ் சர்மா 7 பந்துகளுக்கு 19 ரன்கள் அடித்து தனது விக்கெட்டை இழக்க பஞ்சாப் அணி, 15.5 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்