#PAKvSL: குசல் மெண்டிஸ், சமரவிக்ரமா அதிரடியான சதம்! பாகிஸ்தானுக்கு 345 ரன்கள் இலக்கு!

Published by
பாலா கலியமூர்த்தி

ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் இன்று காலை 10:30 மணிக்கு தொடங்கிய முதல் போட்டியில் இங்கிலாந்து மற்றும் வங்கதேச அணிகள் விளையாடி வருகிறது. இதுபோன்று, இன்று பிற்பகல் 2 மணிக்கு தொடங்கிய 2வது போட்டி ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இதில், பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியும், தசுன் ஷனக தலைமையிலான இலங்கை அணியும் விளையாடி வருகின்றனர். இப்போட்டியில், டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரரான நிஸ்ஸங்கா மற்றும் குசல் பெரேரா களமிறங்கினர். இதில், குசல் பெரேரா எதிர்பாக்காத விதமாக டக் அவுட்டானார்.

இதன்பின் நிஸ்ஸங்கா மற்றும் குசல் மெண்டிஸ் ஜோடி விக்கெட்டை இழக்காமல் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதில் நிஸ்ஸங்கா 51 எடுத்திருந்த நிலையில், ஷதாப் கான் பந்தில் விக்கெட்டை இழந்தார். மறுபக்கம் அதிரடியாக விளையாடி வந்த குசல் மெண்டிஸ் பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களை தொம்சம் செய்து தனது சத்தை அடித்து அசத்தினார். பின்னர் 77 பந்துகளில் 122 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார்.

இதனைத்தொடர்ந்து, மற்ற வீரர்கள் ஒருபக்கம் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் களத்தில் இருந்த சதீர சமரவிக்ரமா 82 பந்துகளில் சதம் அடித்தார். இறுதிக்கட்டத்தில் சதீர சமரவிக்ரமா 108 ரன்களில் ஹசன் அலி ஓவரில் விக்கெட்டை இழந்தார். இறுதியாக நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் இலங்கை அணி 9 விக்கெட் இழப்பிற்கு 344 ரன்களை குவித்தது. பாகிஸ்தான் பந்துவீச்சை பொறுத்தவரையில், அதிகபட்சமாக ஹசன் அலி 4, ஹரிஸ் ரவூப் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர். எனவே, 345 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களமிறக்கவுள்ளது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

பாமகவில் ராமதாஸுக்கு பின் அன்புமணி தான் – ஜி.கே.மணி திட்டவட்டம்!பாமகவில் ராமதாஸுக்கு பின் அன்புமணி தான் – ஜி.கே.மணி திட்டவட்டம்!

பாமகவில் ராமதாஸுக்கு பின் அன்புமணி தான் – ஜி.கே.மணி திட்டவட்டம்!

சென்னை : தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருவதால், அரசியல் களம் இப்போதே சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. தேர்தல் நடைபெறுவதை…

34 minutes ago
ஈரோடு இரட்டைக் கொலை வழக்கு : 4 பேர் கைது!ஈரோடு இரட்டைக் கொலை வழக்கு : 4 பேர் கைது!

ஈரோடு இரட்டைக் கொலை வழக்கு : 4 பேர் கைது!

ஈரோடு : மாவட்டம், சிவகிரி அருகே உள்ள விளக்கேத்தி உச்சிமேடு பகுதியில் நடந்த இரட்டைக் கொலை சம்பவம் பெரும் பரபரப்பை…

4 hours ago
குஜராத் அணி அசத்தல் வெற்றி! குதூகலத்தில் பெங்களூர், பஞ்சாப்!குஜராத் அணி அசத்தல் வெற்றி! குதூகலத்தில் பெங்களூர், பஞ்சாப்!

குஜராத் அணி அசத்தல் வெற்றி! குதூகலத்தில் பெங்களூர், பஞ்சாப்!

டெல்லி : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் மெல்ல மெல்ல இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், எந்த அணி கோப்பையை வெல்லப்போகிறது என்கிற எதிர்பார்ப்புகளும்…

5 hours ago

திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது – சசிகலா சாடல்!

சென்னை : அஇஅதிமுக முன்னாள் பொதுச்செயலாளர் வி.கே.சசிகலா நேற்று (மே 18, 2025) தஞ்சாவூரில் உள்ள முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நடைபெற்ற…

6 hours ago

பருவமழை முன்னெச்சரிக்கை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம்!

சென்னை : தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்கவிருக்கும் நிலையில், அதற்கு முன்னேற்பாடாகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் முதல்வர் மு.க.ஸ்டாலின்…

6 hours ago

இன்று இந்த 8 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்..அலர்ட் செய்த வானிலை மையம்!

தமிழக மற்றும் அதனை ஒட்டிய வடக்கு கேரள பகுதிகளின் மேல் ஒருவளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக…

7 hours ago