#PAKvSL: குசல் மெண்டிஸ், சமரவிக்ரமா அதிரடியான சதம்! பாகிஸ்தானுக்கு 345 ரன்கள் இலக்கு!

Published by
பாலா கலியமூர்த்தி

ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் இன்று காலை 10:30 மணிக்கு தொடங்கிய முதல் போட்டியில் இங்கிலாந்து மற்றும் வங்கதேச அணிகள் விளையாடி வருகிறது. இதுபோன்று, இன்று பிற்பகல் 2 மணிக்கு தொடங்கிய 2வது போட்டி ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இதில், பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியும், தசுன் ஷனக தலைமையிலான இலங்கை அணியும் விளையாடி வருகின்றனர். இப்போட்டியில், டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரரான நிஸ்ஸங்கா மற்றும் குசல் பெரேரா களமிறங்கினர். இதில், குசல் பெரேரா எதிர்பாக்காத விதமாக டக் அவுட்டானார்.

இதன்பின் நிஸ்ஸங்கா மற்றும் குசல் மெண்டிஸ் ஜோடி விக்கெட்டை இழக்காமல் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதில் நிஸ்ஸங்கா 51 எடுத்திருந்த நிலையில், ஷதாப் கான் பந்தில் விக்கெட்டை இழந்தார். மறுபக்கம் அதிரடியாக விளையாடி வந்த குசல் மெண்டிஸ் பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களை தொம்சம் செய்து தனது சத்தை அடித்து அசத்தினார். பின்னர் 77 பந்துகளில் 122 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார்.

இதனைத்தொடர்ந்து, மற்ற வீரர்கள் ஒருபக்கம் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் களத்தில் இருந்த சதீர சமரவிக்ரமா 82 பந்துகளில் சதம் அடித்தார். இறுதிக்கட்டத்தில் சதீர சமரவிக்ரமா 108 ரன்களில் ஹசன் அலி ஓவரில் விக்கெட்டை இழந்தார். இறுதியாக நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் இலங்கை அணி 9 விக்கெட் இழப்பிற்கு 344 ரன்களை குவித்தது. பாகிஸ்தான் பந்துவீச்சை பொறுத்தவரையில், அதிகபட்சமாக ஹசன் அலி 4, ஹரிஸ் ரவூப் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர். எனவே, 345 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களமிறக்கவுள்ளது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

சாம்பியன்ஸ் டிராபி 2025: இந்தியா த்ரில் வெற்றி!!! ஏமாந்து போன ஆஸ்திரேலியா….

துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில்…

5 hours ago

அதிமுக – தேமுதிக கூட்டணியில் விரிசல்? சில மணி நேரத்தில் காணாமல் போன.. விஜயகாந்த் எக்ஸ் தள பதிவு!

சென்னை : தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட்டு கொடுப்பதாக ஒப்பந்தம் செய்யவில்லை என இபிஎஸ் பேசியுள்ளது தேமுதிகவை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. கடந்த…

8 hours ago

14.8 கிலோ தங்கம் கடத்தலில் ஈடுபட்ட கன்னட நடிகை ரன்யா ராவ் கைது!.

பெங்களூரு : துபாயிலிருந்து தங்கம் கடத்தியதாக நடிகை ரான்யா ராவ் கைது செய்யபட்டார். கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியொருவரின் நெருங்கிய உறவினரான…

8 hours ago

INDvsAUS : கடைசி நேரத்தில் தொடர்ச்சி விக்கெட்..திணறிய ஆஸ்..இந்தியாவுக்கு வைத்த இலக்கு!

துபாய் : 2025 -ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி போட்டி இன்று  துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று…

9 hours ago

ஹெட் விக்கெட்டை எடுக்க முடியுமா? சவால் விட்ட ஸ்மித்…பதிலடி கொடுத்த இந்தியா!

துபாய் : இந்தியா என்றாலே எனக்கு பிடிக்கும் என்பது போல ஐசிசி போட்டிகளில் ஆஸ்ரேலியா அணியின் தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ்…

11 hours ago

குட் பேட் அக்லி பார்த்து ஓடியதா இட்லி கடை? ரிலீஸ் தேதிக்கு வந்த திடீர் சிக்கல்!

சென்னை : வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி அஜித்தின் குட் பேட் அக்லி, மற்றும் தனுஷின் இட்லி கடை ஆகிய படங்கள்…

11 hours ago