இனவெறியை தூண்டும் வகையில் பேசிய பாகிஸ்தான் கேப்டன்!! 4 போட்டிகளில் விளையாட தடை!!ஐ.சி.சி அதிரடி
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி கேப்டன் சர்பராஸ் அகமது 4 போட்டிகளில் விளையாட ஐ.சி.சி.தடை விதித்துள்ளது.
ஒருநாள் போட்டியின் போது பாகிஸ்தான் கேப்டன் சர்பராஸ் அகமட் தென் ஆப்பிரிக்க வீரர் ஒருவரை பார்த்து. ‘டேய் கருப்பு பயலே வேகமாக அவுட்டாகி விட்டு வெளியேறு’ என்று இனவெறியை தூண்டும் வகையில் பேசி இருந்தார்.
இது ஸ்டம்பின் அருகிலிருந்த மைக்ககில் பதிவாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பின்னர் இதற்கு உடனடியாக மன்னிப்புக் கோரினார் பாகிஸ்தான் கேப்டன் சர்பராஸ்.
இந்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி கேப்டன் சர்பராஸ் அகமது 4 போட்டிகளில் விளையாட ஐ.சி.சி.தடை விதித்துள்ளது.