உலகக்கோப்பையில் பாபர் அசாம் தலைமையில் பாகிஸ்தான் அணி மோசமாக விளையாடி 9 போட்டிகளில் 4 போட்டிகளில் வெற்றியும், 5 போட்டிகளில் தோல்வியையும் தழுவி புள்ளி பட்டியலில் ஐந்தாவது இடத்தைப் பிடித்து அரையிறுதி தகுதிக்கான வாய்ப்பை இழந்து வெளியேறியது. இதைத்தொடர்ந்து கேப்டன் பாபர் ஆசாமும் கேப்டன் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார்.
பின்னர் பாகிஸ்தான் டி20 அணியின் கேப்டனாக ஷஹீன் அப்ரிடியும், டெஸ்ட் கேப்டனாக ஷான் மசூத் நியமனம் செய்யப்பட்டனர். இந்நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய கேப்டன் ஷான் மசூத் தலைமையில் பாகிஸ்தான் அணி தங்களது முதல் டெஸ்ட் தொடரை விளையாட உள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு பயணம் மேற்கொள்ளும் பாகிஸ்தான் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடரின் முதல் போட்டி டிசம்பர் 14 முதல் 18 வரையும் , 2-வது போட்டி டிசம்பர் 26 முதல் 30 வரையும் 3-வது போட்டி ஜனவரி 03 முதல் 07 -ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
டெஸ்ட் தொடருக்கான பாகிஸ்தான் அணி:
ஷான் மசூத் (சி), பாபர், ஷஹீன், அமீர் ஜமால், அப்துல்லா ஷபீக், அப்ரார், ஃபஹீம், ஹசன் அலி, இமாம், குர்ரம் ஷெஹ்சாத், மிர் ஹம்சா, ரிஸ்வான், வாசிம் ஜூனியர், நௌமன் அலி, சைம் அயூப், ஆகா சல்மான், சர்ஃபராஸ் (விக்கெட் கீப்பர்), சவுத் ஷகீல் ஆகியோர் இடம்பெறுள்ளனர்.
சென்னை : கைலாசாவில் வசித்து வருவதாக சொல்லப்படும் நித்தியானந்தா கடந்த 2 நாட்களுக்கு முன்பு இறந்துவிட்டதாக அவருடைய சகோதரியின் மகன்…
சென்னை : தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க நேரம் கேட்டு…
சென்னை : இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் மற்றும் பாடகி சைந்தவி இருவரும் விவாகரத்து பெறுவதாக கடந்த ஆண்டே அறிவித்துவிட்டனர். அதனைத்தொடர்ந்து இவர்களுடைய…
சென்னை : இன்று, ஏப்ரல் 2-ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடர் கூடும் நிலையில், இன்று முக்கியமாக கச்சத்தீவை திரும்பப் பெற…
சென்னை : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வரும் சூழலில் ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் காத்திருந்த சென்னை…
பாங்காக் : மியான்மரில் கடந்த மார்ச் 28-ஆம் தேதி அன்று ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து,…