பந்து வீச்சில் மிரட்டிய இங்கிலாந்து.. 93 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் தோல்வி..!

Published by
murugan

ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பையில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெற்றது. முதல் போட்டியில் ஆஸ்திரேலியா  8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டியில் பாகிஸ்தான் அணியும், இங்கிலாந்து அணியும்  கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் மோதியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்து வீச முடிவு செய்தது.

இங்கிலாந்து அணியின் தொடங்க வீரர்கள் ஜானி பேர்ஸ்டோவும், டேவிட் மலனும் இணைந்து சிறப்பாக விளையாடி பார்ட்னர்ஷிப்பை அமைத்தனர்.இருப்பினும் டேவிட் மலன் 39 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார். முதல் விக்கெட்டுக்கு 82 ரன்கள் சேர்த்தனர்.

பின்னர் ஜோ ரூட் களமிறங்க ஜானி பேர்ஸ்டோ அரைசதம் அடித்து 59 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து  பென் ஸ்டோக்ஸ், ஜோ ரூட் கூட்டணி அமைத்தனர்.  இதில் அதிரடியாக விளையாடிய பென் ஸ்டோக்ஸ் 76 பந்தில் 11 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் விளாசி 84 ரன்னில் பெவிலியன் திரும்பினார். இவர்கள் இருவரின் கூட்டணியில் 132 ரன்கள் சேர்க்கப்பட்டது.

மறுபுறம் விளையாடி வந்த ஜோ ரூட் அடுத்து இரண்டு ஓவரில் அரைசதம் அடித்து 60 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஹாரி புரூக் 30, கேப்டன் ஜோஸ் பட்லர் 27 ரன்களுக்கு ரன் அவுட் ஆனார்கள். அடுத்து வந்த அனைத்து வீரர்களும் சொற்ப ரன்னில் வெளியேற இறுதியாக இங்கிலாந்து அணி 50 ஓவரில் 9 விக்கெட்டைகளை இழந்து 337 ரன்கள் எடுத்தனர். பாகிஸ்தான் அணியில் ஹாரிஸ் ரவுஃப் 3 விக்கெட்டையும், முகமது வாசிம், ஷாஹீன் அப்ரிடி தலா 2 விக்கெட்டையும் பறித்தனர்.

பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக அப்துல்லா ஷபீக், ஃபகார் ஜமான் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடங்கிய 2-பந்திலே அப்துல்லா ஷபீக் டக் அவுட் ஆனார். பின்னர் கேப்டன் பாபர் அசாம் களமிறங்கினார். இருப்பினும் 3-வது ஓவரில் தொடக்க வீரர் ஃபகார் ஜமான் 1 ரன் எடுத்து பென் ஸ்டோக்கிடம் கேட்சை கொடுத்தார். இதனால் பாகிஸ்தான் அணி 10 ரன்னில் 2 விக்கெட்டை பறிகொடுத்தது.

அடுத்து இறங்கிய முகமது ரிஸ்வான் களத்தில் இருந்த கேப்டன் பாபர் அசாம்  உடன் இணைந்து சற்று ரன்களை உயர்த்தினர். நிதானமாக விளையாடி வந்தஇருவரும் அரைசதம் அடிக்காமல் அடுத்தடுத்த சில ஓவர்களில் விக்கெட்டை பறிகொடுத்தனர். அதன்படி முகமது ரிஸ்வான் 36 ரன்களிலும் , கேப்டன் பாபர் அசாம் 38 ரன்களிலும் வெளியேறினர்.

உலகக்கோப்பையில் வெளியேறிய பாகிஸ்தான்.. 338 ரன்கள் நிர்ணயித்த இங்கிலாந்து..!

மத்தியில் இறங்கிய ஆகா சல்மான் மட்டும் நிலைத்து நின்று நிதானமாக அரைசதம் பூர்த்தி செய்து 51 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினார். கடைசியில் இறங்கிய ஷதாப் கான் 4, இப்திகார் அகமது 3 ரன்கள் எடுக்க இறுதியாக பாகிஸ்தான் அணி 43.3 ஓவரில் 244 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டை இழந்து 93 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இங்கிலாந்து அணியில் டேவிட் வில்லி 3 விக்கெட்டையும்,  கஸ் அட்கின்சன், மொயின் அலி, அடில் ரஷித் தலா 2 விக்கெட்டை பறித்தனர்.

Published by
murugan

Recent Posts

RCB vs GT : இந்த முறை ‘கிங்’ ஆட்டம் மிஸ் ஆயிடுச்சி., குஜராத் சூழலில் வீழ்ந்த விராட் கோலி!

பெங்களூரு : இன்று (ஏப்ரல் 2) நடைபெறும் ஐபிஎல் 2025 போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், குஜராத் டைட்டன்ஸ்…

2 minutes ago

இங்க நான் தான் கிங்.! எலான் மஸ்க் முதலிடம்! டாப் 5 உலக பணக்காரர் லிஸ்ட் இதோ..

ஜெர்சி சிட்டி : ஆண்டுதோறும் ஏப்ரல் 1ஆம் தேதியன்று ஃபோர்ப்ஸ் பத்திரிகையானது உலக பணக்காரர்களின் பட்டியலை வெளியிடும். அதன்படி நேற்று…

1 hour ago

”சேட்டன் வந்நல்லே… சேட்டை செய்ய வந்நல்லே” மீண்டும் கேப்டனாக களமிறங்கும் சஞ்சு சாம்சன்.!

பெங்களூரு : வரும் 5-ம் தேதி நடைபெறவுள்ள பஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் இருந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின்…

2 hours ago

“வக்பு சொத்துகளை மத்திய அரசு அபகரிக்க நினைக்கிறது!” ஆ.ராசா கடும் தாக்கு!

டெல்லி : வக்பு வாரிய திருத்த சட்டமானது இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த சட்ட திருத்தத்தை மத்திய சிறுபான்மை…

2 hours ago

வக்பு வாரிய திருத்த சட்டம் : பிரதமருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்.!

டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இன்று வக்பு வாரிய திருத்த சட்டத்தை மக்களவையில் மத்திய சிறுபான்மை மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை…

2 hours ago

“டெல்லி நாடாளுமன்றமே வக்பு சொத்தா மாறியிருக்கும்” மத்திய அமைச்சர் பரபரப்பு பேச்சு!

டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடரில் வக்பு வாரிய திருத்த சட்டத்தை மக்களவையில் மத்திய சிறுபான்மை மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை…

3 hours ago