இன்று முதல் ஒருநாள் போட்டி.., பிளேயிங் லெவனில் விளையாடும் வாய்ப்பு யாருக்கு..!

Default Image

இன்று இலங்கை, இந்தியா இடையே முதல் ஒருநாள் போட்டி 3 மணிக்கு  தொடங்கவுள்ளது.

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி மூன்று ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இந்திய அணியில் அனைவருமே  இளம் வீரர்களாக உள்ளனர். மேலும் அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் உள்ளார்.

இந்நிலையில், இன்று இரு அணிகளுக்கும் இடையே முதல் ஒருநாள் போட்டி இந்திய நேரப்படி இன்று 03:00 மணிக்கு போட்டி தொடங்கவுள்ளது. இப்போட்டி  கொழும்பில் உள்ள ஆர்.பிரமதாச மைதனத்தில் நடைபெறுகிறது. இந்திய அணிக்கு தவான் கேப்டனாகவும்,புவனேஷ்வர் குமார் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்திய அணி:

தவான் (கேப்டன்), பிரித்வி ஷா, பட்டிக்கல், ருத்ராஜ் கெயிக்வாட், சூர்யகுமார் யாதவ், புவனேஷ்வர் குமார் ( துணை கேப்டன்), மணிஷ் பாண்டே, ஹர்திக் பாண்ட்யா, குருணால் பாண்ட்யா, நிதிஷ் ராணா, இஷான் கிஷான் ( கீப்பர்), சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), சாஹல், ராகுல் சஹார், கிருஷ்ணப்பா கவுதம், குல்தீப் யாதவ், வருண் சக்கரவர்த்தி, தீபக் சஹார், நவ்தீப் சைனி, சேட்டன் சக்காரியா ஆகியோர் உள்ளனர்.

இந்திய அணியில் உள்ள அனைத்து வீரர்களும் ஐபிஎல் தொடரில் சிறப்பாக  விளையாடியவர்கள். இதனால் பிளேயிங் லெவனில் விளையாடும் வாய்ப்பு யாருக்கு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்