#Cricket Breaking:இரட்டை சதம் அடித்து வரலாற்று சாதனை படைத்த ஜோ ரூட்

Default Image

இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி சென்னையில் நடைபெற்று வருகிறது.டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த இங்கிலாந்து வலுவான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.

இரண்டாம் நாள் ஆட்டமான இன்று இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது ஐந்தாவது இரட்டை சதத்தை அடித்து வரலாற்று சாதனை படைத்துள்ளார்.ஜோ ரூட் க்கு இது 100 வது டெஸ்ட் போட்டியாகும்.டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 100 வது டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் அடித்த முதல் வீரர் என்ற வரலாற்று சாதனையை படைத்துள்ளார் ஜோ ரூட்.

இதற்கு முன்னதாக பாகிஸ்தானின் முன்னாள் கேப்டன் இன்சாம்-உல்-ஹக் 2005 இல் இந்தியாவுக்கு எதிராக 184 ரன்கள் எடுத்தது அதிகபட்சமாக இருந்தது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்