ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடரி இன்றைய 35ஆவது லீக் போட்டியில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும் மோதி வருகிறது. அரையிறுதி ரேஸில் நீடிக்க வேண்டும் என்றால், இந்த போட்டியில் வெற்றி மிக அவசியம். இதனால், இரு அணிகளும் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் களமிறங்கியுள்ளது.
அந்தவகையில், பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெறும் இப்போட்டியில் பாகிஸ்தான் டாஸ் வென்று பந்துவீச முடிவு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங்கில் களமிறங்கிய நியூசிலாந்து அணி 35 ரன்களுக்கு தொடக்க ஆட்டக்காரர் டெவோன் கான்வே விக்கெட்டை இழந்தாலும், ரச்சின் ரவீந்திரன் மற்றும் கேப்டன் கேன் வில்லியம்சன் நிதானம் மற்றும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
உலக கோப்பையில் நான் இல்லை.. ஏற்றுக்கொள்ள முடியவில்லை.! ஹர்திக் பாண்டியா உருக்கம்.!
சிறப்பாக விளையாடி வந்த இருவரும் பாகிஸ்தான் பந்துவீச்சை சிதறடித்து, தங்களது அரை சதத்தை பூர்த்தி செய்தனர். இதன்பின், இருவரும் சதங்களை நோக்கி விளையாடி வந்த நிலையில், இதில் ரச்சின் ரவீந்திரன் தனது சதத்தை அடித்து 94 பந்துகளில் 108 ரன்கள் விக்கெட்டை இழந்தார். மறுபக்கம் கேன் வில்லியம்சன் 79 பந்துகளில் 95 ரன்கள் அடித்து இருந்த நிலையில், சதத்தை தவறவிட்டார்.
இதனைத்தொடர்ந்து வந்த டேரில் மிட்செல் 29, மார்க் சாப்மேன் 39, க்ளென் பிலிப்ஸ் 41, மிட்செல் சான்ட்னர் 26 ரன்கள் அடித்து அணிக்கு ரன்களை குவித்தனர். இறுதியாக நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 401 ரன்களை குவித்தது நியூசிலாந்து. பாகிஸ்தான் அணியை பொறுத்தவரையில் அதிகபட்சமாக முகமது வாசிம் ஜூனியர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த நிலையில், 402 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி பாகிஸ்தான் களமிறங்கியுள்ளது.
சென்னை : தமிழக ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு சரிவர கிடைக்கப்பெறவில்லை என்றும், கடந்த 6 மாதங்களாக சரிவர கிடைக்காமல்…
பெங்களூர் : இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளானது மழையின் காரணமாக நடைபெறாமல்…
சென்னை : கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கனமழை பெய்து வந்த நிலையில் தற்போது அடுத்ததாக வரும் அக்-20 ம்…
ஜெருசலேம் : காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும், இஸ்ரேல் ராணுவத்திற்கும் இடையே கடந்த ஒரு வருட காலமாக போர்…
சென்னை : வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று கரையைக் கடந்தது. இதனால், தமிழகம் மற்றும்…
துபாய் : நடைபெற்று வரும் மகளிர் உலகக் கோப்பை தொடரில் முதல் அரை இறுதிப் போட்டியானது இன்று நடைபெற்றது. இந்தப்…