NZvPAK: போட்டியின்போது பாகிஸ்தான் செய்த தவறுகளை தனது போர்டில் குறிப்பிட்ட ரசிகர்!

Published by
Surya

நியூசிலாந்து – பாகிஸ்தான் இடையே நடக்கும் டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் அணி செய்த தவறுகளை நியூசிலாந்து ரசிகர் ஒருவர், தனது கையில் இருக்கும் ஒரு போர்டில் குறிப்பிட்டார்.

நியூசிலாந்து சென்றடைந்த பாகிஸ்தான் அணி, 2 டெஸ்ட் போட்டிகளை விளையாடி வருகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டி மவுண்ட் மவுன்கனுயில் நடைபெற்று வருகிறது. 30 ஆம் தேதி வரை நடைபெறும் இந்த முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி, 431 ரன்கள் எடுத்தது. அடுத்த தனது இன்னிங்க்ஸை தொடங்கிய பாகிஸ்தான் அணி, 239 ரன்களுக்கு தனது அனைத்து விக்கெட்களையும் இழந்து, 192 ரன்கள் வித்தியாசத்தில் பின்னடைவில் உள்ளது. இந்நிலையில், இந்த டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் அணி செய்த தவறுகளை நியூசிலாந்து ரசிகர் ஒருவர், தனது கையில் இருக்கும் ஒரு போர்டில் குறிப்பிட்டுக்கொண்டு வந்தார்.

அந்த போர்டில் பாகிஸ்தான் அணி, 2 முறை கேட்ச்சை ட்ராப் செய்துள்ளதாகவும், 18 முறை புவர் த்ரோ (Poor Throw) செய்துள்ளதாகவும், 2 முறை டி.ஆர்.எஸ்.-ஐ தவறாக பயன்படுத்தியதாகவும், 6 முறை மிஸ்-பீல்ட் செய்துள்ளதாக அதில் குறிப்பிட்டிருந்தார். தற்பொழுது இந்த புகைப்படம் சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Published by
Surya

Recent Posts

அண்ணாமலைக்கு எதிரான கருத்து: ஆதவ் அர்ஜூனாவுக்கு மார்ட்டினின் மகன் சரமாரி குற்றச்சாட்டு.!

அண்ணாமலைக்கு எதிரான கருத்து: ஆதவ் அர்ஜூனாவுக்கு மார்ட்டினின் மகன் சரமாரி குற்றச்சாட்டு.!

சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டம் கடந்த மார்ச் 28ம் தேதி சென்னை திருவான்மியூர்ராமச்சந்திரா…

50 seconds ago

சம்பவம் செய்யும் வீர தீர சூரன்…வசூல் முதல் ஓடிடி அப்டேட் வரை!

சென்னை : விக்ரம் நடித்த வீர தீர சூரன் திரைப்படம் பெரிய எதிர்பார்புகளுக்கு மத்தியில் கடந்த மார்ச் 27-ஆம் தேதி திரையரங்குகளில்…

48 minutes ago

சுங்கச்சாவடி கட்டண உயர்வு இன்று முதல் அமல்.! வாகன ஓட்டிகள் அதிருப்தி…

சென்னை : தமிழ்நாட்டில் உள்ள 40 சுங்கச்சாவடிகளில் இன்று, அதாவது (ஏப்ரல் 1) முதல் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது. …

50 minutes ago

live : தமிழ்நாடு சட்டப்பேரவை முதல்…சுட்டெரிக்கும் வானிலை அப்டேட் வரை!

சென்னை : மூன்று நாட்கள் இடைவெளிக்குப் பிறகு, இன்று, அதாவது 2025 ஏப்ரல் 1 அன்று, தமிழ்நாடு சட்டப்பேரவை மீண்டும்…

2 hours ago

சுற்றுலா பயணிகளே கவனம்! கொடைக்கானலில் இ-பாஸ் நடைமுறை இன்று முதல் அமல்!

சென்னை : கொடைக்கானலில் இ-பாஸ் நடைமுறை இன்று, அதாவது 2025 ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வந்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தின்…

2 hours ago

மீண்டும் வாய்ப்பு கிடைத்தால் விண்வெளி செல்வீர்களா? சுனிதா வில்லியம்ஸ் சொன்ன பதில்!

ஃபுளோரிடா : கடந்த 2024 ஜூலை மாதம், ஒரு வார கால ஆராய்ச்சிப் பணிக்காக சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS)…

3 hours ago