உலகக் கோப்பை இறுதிப்போட்டி- தோல்வியுற்ற நியூசிலாந்து அணிக்கு சிறப்பு விருது..!

Published by
பாலா கலியமூர்த்தி
  • உலகக் கோப்பை NZ VS ENG இறுதிப்போட்டியில் விளையாடிய நியூசிலாந்து அணிக்கு சிறப்பு விருது வழங்கப்பட்டுள்ளது.
  • நியூசிலாந்து மனவுறுதி விருது வழங்கப்பட்டது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு 10 அணிகளை கொண்டு உலகக்கோப்பை  போட்டி நடத்தப்பட்டது. அதில் இறுதியாக உலகக்கோப்பைக்கு இறுதிச் சுற்றில் நியூசிலாந்து – இங்கிலாந்து அணிகள் மோதின. ஆட்டம் விறுவிறுப்பாக நடந்து கொண்டு வந்தது.

பின்பு இரு அணிகளும் ‘டிரா’வில் முடிந்ததால் சூப்பர் ஓவர் நடந்தது. இதுவும் டிரா ஆனதால், அதிக பவுண்டரிகள் அடித்துள்ள அணி எதுவோ அந்த அணிக்கு  கோப்பையை வழங்க வேண்டுமென்று நடுவர்கள் தீர்மானித்தனர்.அதன்படி இங்கிலாந்து அணி தான் அதிக பவுண்டரிகள் அடித்திருந்தது.இதனால் இங்கிலாந்து அணிக்கு உலகக்கோப்பையை வழங்கப்பட்டது.

நடுவரின் இந்த முடிவை நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சனும் மற்ற வீரர்களும் இரண்டாம் இடத்தை எவ்வித மனக்கலக்கமின்றி ஏற்றுக்கொண்டனர்.இந்நிலையில், உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் விளையாடிய நியூசிலாந்து அணியின் திடமான மனப்பாங்கை பாராட்டி அந்த அணிக்கு இவ்வாண்டின் கிரிக்கெட்டின் மன உறுதி எனும் சிறப்பு விருதை லண்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் மேரிலிபோன் கிரிக்கெட் கிளப் வழங்கி கௌரவித்துள்ளது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

இனி எல்லாமே வெற்றி தான்., பிளே ஆஃப் உறுதி? CSK சிஇஓ நம்பிக்கை!

இனி எல்லாமே வெற்றி தான்., பிளே ஆஃப் உறுதி? CSK சிஇஓ நம்பிக்கை!

சென்னை : இந்த வருட ஐபிஎல் சீசன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், ரசிகர்களுக்கும் சோகமான சீசனாகவே அமைந்து வருகிறது.…

43 minutes ago

தலைவா… தெய்வமே… பரவசத்தில் வெறும் கையில் ரஜினி ரசிகர் செய்த செயல்.!

கேரளா : ஜெயிலர் 2 படத்தின் அறிவிப்பு வெளியானதிலிருந்து, அதன் ஒவ்வொரு அப்டேட்டையும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். தற்போது,…

1 hour ago

புதிய போப் ஆண்டவர் யார்? உலகளாவிய தேர்வுக் குழுவில் 4 இந்திய கார்டினல்கள்!

வாட்டிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் கத்தோலிக்க திருச்சபை போப் பிரான்சிஸ், தனது 88வது வயதில் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது…

1 hour ago

டாஸ்மாக் ஊழியர்களுக்கு நற்செய்தி.., சம்பள உயர்வை அறிவித்த அமைச்சர் செந்தில் பாலாஜி.!

சென்னை : டாஸ்மாக்கில் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு ரூ.2,000 ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் செந்தில் பாலாஜி…

2 hours ago

வெளியானது UPSC தேர்வு முடிவுகள்.., நான் முதல்வன் திட்ட மாணவன் சாதனை!

சென்னை : இந்தியாவில் IAS, IPS, IFS, IRS ஆகிய சிவில் சர்வீஸ் காலிப்பணியிடங்களுக்கான தேர்வுகள் கடந்த 2024 ஜூன்…

2 hours ago

“சாதி சான்றிதழ்களில் எழுத்துப் பிழைகள் இருக்கக் கூடாது”- உயர்நீதிமன்றம் உத்தரவு.!

சென்னை : சாதி சான்றிதழ்களில் சாதியின் பெயர் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்று தமிழ்நாடு…

4 hours ago