கோலி எனது நண்பர்.. அவரை எப்படி அவுட்டாக்குவது என தெரியவில்லை?- மொயின் அலி!

Published by
Surya

விராட் கோலியை எப்படி அவுட்டாக்குவது என தெரியவில்லை. அவர் ஒரு அற்புதமான வீரர், உலகத்தரம் வாய்ந்தவர் என்று இங்கிலாந்து பந்துவீச்சாளர் மொயீன் அலி தெரிவித்துள்ளார்.

இந்தியாவிற்கு இங்கிலாந்து அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு, 4 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 5 டி-20 போட்டிகளில் விளையாடவுள்ளது. இதில் 4 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடர், வரும் பிப்ரவரி 15 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் சென்னையில் நடைபெறவுள்ளது. இவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து, இலங்கைக்கு எதிரான தொடரில் இவரால் விளையாட முடியவில்லை.

தற்பொழுது இந்தியாக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இங்கிலாந்து அணியில் மொயீன் அலி இடம்பெற்றுள்ளார். இதனையடுத்து அவர் ESPN ஊடகத்திற்கு பேட்டியளித்துள்ளார். அந்த பேட்டியில், 200 விக்கெட்களை கைப்பற்றுவதற்கான இலக்கு, வெகு தொலைவில் இல்லை. அதனை அடைந்தபின் தான் மற்றொரு இலக்கை நிர்ணயிப்பேன் எனவும், தாம் நன்றாக இருப்பதாகவும், நீண்ட நாட்களாக விளையாட காத்திருந்தேன் என்றும், விளையாட தயாராக உள்ளதாகவும் கூறினார்.

மேலும் தனது பேட்டிங் திறனை மேம்படுத்த இதர வீரர்களுடன் பயிற்சி மேற்கொண்டுள்ளதாக பேசிய அவர், ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணியின் கேப்டன் கோலி குறித்து பேசினார். அப்பொழுது, விராட் கோலியை எப்படி அவுட்டாக்குவது என தெரியவில்லை. அவர் ஒரு அற்புதமான வீரர், உலகத்தரம் வாய்ந்தவர். ஆஸ்திரேலிய வெற்றிக்கு பின் அவருக்கு உத்வேகம் மேலும் அதிகரித்திருக்கும். ஏனென்றால் அவருக்கு பலவீனமே இல்லை. ஆனால் எங்களிடம் திறமை வாய்ந்த பந்துவீச்சாளர்கள் இருக்கின்றார்கள் என்று குறிப்பிட்டார்.

கோலிக்கு எந்த விதமான பலவீனமும் இல்லை என்றும், கோலி என்னுடைய ஒரு நல்ல நண்பர். நாங்கள் கிரிக்கெட்டைப் பற்றி அதிகம் பேசமாட்டோம் எனவும் தெரிவித்துள்ளார்.

Published by
Surya

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

10 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

11 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

11 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

12 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

12 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

12 hours ago