T20 Worldcup 2024 , 2nd Semifinal [file image]
டி20 உலகக்கோப்பை: அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ்ஸில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை தொடரின் நாளை அரை இறுதி போட்டியானது தொடங்க இருக்கிறது. இதில் முதல் அரை இறுதி போட்டியாக ஆப்கானிஸ்தான் அணியும், தென்னாபிரிக்கா அணியும் மோதவுள்ளது.
அதே போல் அடுத்த நாள் அதாவது நாளை மறுநாள் (ஜூன்-27) இந்திய அணியும், இங்கிலாந்து அணியும் 2-வது அரை இறுதி போட்டியில் விளையாடவுள்ளனர். முதல் அரை இறுதி போட்டியானது ஒரு வேளை மழை காரணமாக தடைபெற்று நடக்காமல் போனால் ரிசர்வ் நாளான மறுநாள் (ஜூன்-27) இந்த போட்டியானது நடத்தப்படும்.
தற்போது, வெளியான தகவலின்படி கயானாவில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் விளையாட இருக்கும் 2-ஆம் அரை இறுதி போட்டியில் மழை பெய்வதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக தெரியவந்துள்ளது. ஒரு வேளை 2-வது அரை இறுதியில் மழை பெய்து ஆட்டம் தடைபட்டால் இந்த 2-வது அரை இறுதி போட்டிக்கு ரிசர்வ் நாளை ஐசிசி அறிவிக்கவில்லை.
மேலும், இறுதி போட்டிக்கு அடுத்து ஒருநாள் மட்டுமே பயிற்சி செய்ய இருப்பதன் காரணமாக இந்த போட்டிக்கு ரிசர்வ் நாளை ஒதுக்கவில்லை. இதன் காரணமாக அந்த போட்டியானது நடைபெறுமால் இருந்தால் இந்திய அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்று விடுவார்கள்.
அதற்கு காரணம் இந்திய அணி சூப்பர் 8 சுற்றிலும், லீக் சுற்றிலும் புள்ளிப்பட்டியலில் முதல் இடம் பிடித்து இருந்ததன் காரணமாக இந்திய அணி இறுதி போட்டிக்கு தகுதி பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எந்த அளவுக்கு மோசமாக விளையாடமுடியுமோ அந்த அளவுக்கு இந்த சீசனில் விளையாடி வருவதாக…
சென்னை : தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இன்னும் ஓராண்டு காலமே உள்ளதால் தற்போதே அரசியல் தேர்தல் களம் பரபரக்க…
சென்னை : கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர், கடந்த ஏப்ரல் 5-ம் தேதி பூப்பெய்திய…
சென்னை : இன்னும் ஓராண்டில் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் பதவியில்…
சென்னை : அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள குட் பேட் அக்லி படத்தை பார்த்த அஜித் ரசிகர்கள் படம் தாறுமாறாக இருப்பதாக தங்களுடைய…
சென்னை : நேற்றைய தினம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமை செயலலகத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனை…