சேவாக்னா யாரு? யாரும் யாருக்கும் பதிலளிக்க தேவை இல்லை ! ஷகிப் அல் ஹசன் காட்டம்!!

Published by
அகில் R

ஷகிப் அல் ஹசன்:  நடைபெற்றது உலகக்கோப்பை தொடரில் வங்கதேச அணியில் இடம்பெற்றுள்ள வீரரான ஷாகிப் அல் ஹசன், இந்தியா முன்னாள்  வீரரான வீரேந்தர் சேவாக்கின் கருத்தை குறித்து பேசி இருக்கிறார்.

நடப்பாண்டில் நடைபெற்று வரும் 20 ஓவர் உலகக்கோப்பை தொடரில் வங்கதேச அணி 3 போட்டிகளில் விளையாடி, 2 போட்டிகளில் வெற்றி பெற்று 4 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 2-வது இடத்தில் இருந்து வருகிறது. மீதம் இருக்கும் ஒரு போட்டியில் வெற்றி பெற்றால் வங்கதேச அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறி விடும் என்பது குறிப்பிடத்தக்கது.

வங்கதேச அணி விளையாடிய இந்த 3 போட்டிகளில் ஷாகிப் அல் ஹசன் குறிப்பிட்டு சொல்லும்படி  எந்த ஒரு ஸ்கோரையும் பதிவு செய்யவில்லை. இதனை குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரரான வீரேந்தர் சேவாக்,”ஷாகிப் அல் ஹசன் அதிக அனுபவங்களை கொண்ட வீரர் வங்கதேச அணியின் கேப்டனாக நீண்ட காலம் செயல்பட்டுள்ளார். ஆனால் டி20 கிரிக்கெட்டில் அவரது செயல்பாடுகள் மோசமான இருந்துள்ளன. இதனை நினைத்து அவர் வெக்கப்பட வேண்டும்”, என இது போல விமர்சித்து பேசி இருந்தார்.

இதனை குறித்தது  தென்னாபிரிக்கா அணியுடனான போட்டி முடிந்த பிறகு ஷாகிப் அல் ஹசனிடம், பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். பத்திரிகையளர்கள், வீரேந்தர் சேவாக் இது போன்று கூறி இருக்கிறாரே இதற்கு உங்கள் கருத்து என்ன என்று கேட்ட  போது, அவர் சேவாக் யார்? என சேவாக்கை தெரியாதது போல மீண்டும் ஒரு முறை கேட்பார்.

அதன் பின் பேசிய அவர், “இங்கு எந்த வீரரும் யாருக்கும் பதில் அளிக்க வேண்டிய அவசியமில்லை. அணியின் வெற்றிக்கு உதவுவது தான் ஒரு வீரரின் பணியாகும். பேட்ஸ்மேனாக, ஒரு பவுலராக, ஒரு ஃபீல்டராக சிறப்பாக செயல்பட்டு அணியை வெற்றி பெற வைக்க வேண்டும். மற்றபடி யாருக்கும் பதிலளிக்க தேவையில்லை.

அதே போல், ஒரு வீரரால் அணியின் வெற்றிக்கு பங்களிக்க முடியவில்லை என்றால், நிச்சயம் சில விவாதங்கள் வரும். அதில் எந்த தவறும் இல்லை என நான் நினைக்கிறேன். என் கிரிக்கெட் வாழ்க்கை முழுக்கவே அப்படி தான் இருந்திருக்கிறேன். கிரிக்கெட்டில் ஒரு நாள் உங்களுக்கான நாளாக அமையும், மற்றொரு நாள் வேறொருவர் நாளாக அமையும். எனது அணிக்காக விளையாடுவதே எனது பணி, அதை நான் தொடர்ந்து செய்வேன்”, என்று கூறி இருந்தார்.

Published by
அகில் R

Recent Posts

AFG vs ENG: கடைசி வரை போராடிய இங்கிலாந்து… கடைசியில் திரில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான்

லாகூர் : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இன்றயை போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் லாகூரின் கடாபி மைதானத்தில்…

4 hours ago

ஈஷாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா! காலை 6 மணி வரை தியானம்!

கோவை : ஈஷா யோகா மையத்தில் இன்று (பிப்ரவரி 26, 2025) மஹா சிவராத்திரி விழா நடைபெற்று வருகிறது. இந்த…

7 hours ago

கேமிங் பிரியர்களுக்காக தான் இது! iQoo Neo 10R சிறப்பு அம்சங்கள் முதல் விலை வரை!

டெல்லி : IQOO போன் என்றாலே கேம் பிரியர்களுக்கு மிகவும் பிடிக்கும் என்று சொல்லலாம். விவோ நிறுவனத்துடன் இணைந்து இருக்கும்…

8 hours ago

மத கஜ ராஜா வசூலை மொத்தமாக எரித்த டிராகன்! 5 நாட்களில் இவ்வளவு வசூலா?

சென்னை :  எங்கே பார்த்தாலும் டிராகன் படம் பார்த்தாச்சா? பார்த்தாச்சா என்கிற குரல் தான் கேட்டு கொண்டு இருக்கிறது. அந்த…

9 hours ago

AFG vs ENG: இந்த டார்கெட்டை அடிச்சு காமிங்க! சதம் விளாசி இங்கிலாந்துக்கு பெரிய இலக்கு வைத்த இப்ராஹிம்!

லாகூர் : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இன்றயை போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் லாகூரின் கடாபி மைதானத்தில்…

9 hours ago

அடுத்த மகா கும்பமேளா மணலில் தான் நடைபெறும்! ‘ஷாக்’ கொடுக்கும் பருவநிலை ஆர்வலர்!

டெல்லி : கும்பமேளா நிகழ்வு என்பது கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய ஆறுகள் ஒன்றாக கூடும் திரிவேணி சங்கமத்தில் 12…

10 hours ago