சேவாக்னா யாரு? யாரும் யாருக்கும் பதிலளிக்க தேவை இல்லை ! ஷகிப் அல் ஹசன் காட்டம்!!

Published by
அகில் R

ஷகிப் அல் ஹசன்:  நடைபெற்றது உலகக்கோப்பை தொடரில் வங்கதேச அணியில் இடம்பெற்றுள்ள வீரரான ஷாகிப் அல் ஹசன், இந்தியா முன்னாள்  வீரரான வீரேந்தர் சேவாக்கின் கருத்தை குறித்து பேசி இருக்கிறார்.

நடப்பாண்டில் நடைபெற்று வரும் 20 ஓவர் உலகக்கோப்பை தொடரில் வங்கதேச அணி 3 போட்டிகளில் விளையாடி, 2 போட்டிகளில் வெற்றி பெற்று 4 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 2-வது இடத்தில் இருந்து வருகிறது. மீதம் இருக்கும் ஒரு போட்டியில் வெற்றி பெற்றால் வங்கதேச அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறி விடும் என்பது குறிப்பிடத்தக்கது.

வங்கதேச அணி விளையாடிய இந்த 3 போட்டிகளில் ஷாகிப் அல் ஹசன் குறிப்பிட்டு சொல்லும்படி  எந்த ஒரு ஸ்கோரையும் பதிவு செய்யவில்லை. இதனை குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரரான வீரேந்தர் சேவாக்,”ஷாகிப் அல் ஹசன் அதிக அனுபவங்களை கொண்ட வீரர் வங்கதேச அணியின் கேப்டனாக நீண்ட காலம் செயல்பட்டுள்ளார். ஆனால் டி20 கிரிக்கெட்டில் அவரது செயல்பாடுகள் மோசமான இருந்துள்ளன. இதனை நினைத்து அவர் வெக்கப்பட வேண்டும்”, என இது போல விமர்சித்து பேசி இருந்தார்.

இதனை குறித்தது  தென்னாபிரிக்கா அணியுடனான போட்டி முடிந்த பிறகு ஷாகிப் அல் ஹசனிடம், பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். பத்திரிகையளர்கள், வீரேந்தர் சேவாக் இது போன்று கூறி இருக்கிறாரே இதற்கு உங்கள் கருத்து என்ன என்று கேட்ட  போது, அவர் சேவாக் யார்? என சேவாக்கை தெரியாதது போல மீண்டும் ஒரு முறை கேட்பார்.

அதன் பின் பேசிய அவர், “இங்கு எந்த வீரரும் யாருக்கும் பதில் அளிக்க வேண்டிய அவசியமில்லை. அணியின் வெற்றிக்கு உதவுவது தான் ஒரு வீரரின் பணியாகும். பேட்ஸ்மேனாக, ஒரு பவுலராக, ஒரு ஃபீல்டராக சிறப்பாக செயல்பட்டு அணியை வெற்றி பெற வைக்க வேண்டும். மற்றபடி யாருக்கும் பதிலளிக்க தேவையில்லை.

அதே போல், ஒரு வீரரால் அணியின் வெற்றிக்கு பங்களிக்க முடியவில்லை என்றால், நிச்சயம் சில விவாதங்கள் வரும். அதில் எந்த தவறும் இல்லை என நான் நினைக்கிறேன். என் கிரிக்கெட் வாழ்க்கை முழுக்கவே அப்படி தான் இருந்திருக்கிறேன். கிரிக்கெட்டில் ஒரு நாள் உங்களுக்கான நாளாக அமையும், மற்றொரு நாள் வேறொருவர் நாளாக அமையும். எனது அணிக்காக விளையாடுவதே எனது பணி, அதை நான் தொடர்ந்து செய்வேன்”, என்று கூறி இருந்தார்.

Published by
அகில் R

Recent Posts

ENGvsAUS : தொடரை சமன் செய்த இங்கிலாந்து! 186 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தல்!

லார்ட்ஸ் : இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் சுற்றுப்பயணத்தில் ஒருநாள் தொடரானது நடைபெற்று வருகிறது. இதற்கு…

5 hours ago

“இழிவா பேசாதீங்க”..மணிமேகலை VS பிரியங்கா பிரச்சினை குறித்து கொந்தளித்த நிஷா!

சென்னை : மணிமேகலை vs பிரியங்கா இருவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினை, பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்த நிலையில், இப்போது…

12 hours ago

தெரிக்கவிடலாமா.. துபாயில் ரேஸ் காரை ஓட்டி பார்த்த நடிகர் அஜித்.!

சென்னை : படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் அஜித் குமார், இன்னொரு பக்கம் கார் ரேஸ் போட்டியில் கலந்து கொள்வதற்கான…

12 hours ago

3 ஏ.டி.எம் கொள்ளை., ரூ.65 லட்சம் பணம்.! கேரளா போலீஸ் பரபரப்பு தகவல்கள்…

நாமக்கல் : இன்று காலையில் நாமக்கல் குமாரபாளையம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சினிமா பாணியில் வேகமாக சென்ற கண்டெய்னர் லாரியை…

12 hours ago

சோனியா காந்தியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு..!

டெல்லி : நேற்று அரசு முறைப்பயணமாக டெல்லிச் சென்ற தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், இன்று காலை பிரதமர் மோடியை…

12 hours ago

நவராத்திரி ஸ்பெஷல்.. நவராத்திரி பூஜையில் வைக்கபடும் 9 வகை சாதங்கள் எது தெரியுமா ?

சென்னை- நவராத்திரி அன்று அம்பிகைக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நெய்வேத்தியங்கள்  படைக்கப்படுகிறது. அதைப்பற்றி இந்த ஆன்மீக செய்தி குறிப்பில் தெரிந்து…

12 hours ago