அபிஷேக் சர்மா : நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணிக்காக விளையாடிய அபிஷேக் சர்மா இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார். அதன்படி தற்போது, ஜிம்பாப்வே அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட முதல் 3டி2- போட்டியில் விளையாட அவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. முதல் போட்டியில் அபிஷேக் சர்மா டக்-அவுட் ஆன நிலையில், இரண்டாவது போட்டியில் அதிரடியாக விளையாடி சதம் விளாசி அசத்தினார்.
வெறும் 46 பந்துக்கு 100 ரன்கள் எடுத்து அசத்தினார், அதில் 8 சிக்ஸர்களும், 7 பவுண்டரிகளும் அடங்கும். இவருடைய அதிரடியான ஆட்டத்தை பார்த்து ரசிகர்கள் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் இந்தியாவின் எதிர்காலம் என புகழ்ந்து வருகிறார்கள். இந்த சூழலில், அவருடைய தந்தை ராஜ்குமார் எப்போதும் பேட்டிங் ஸ்டைலை அபிஷேக் சர்மா மாற்றவே கூடாது என அவருக்கு அட்வைஸ் கொடுத்துள்ளார்.
தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பேசிய ராஜ்குமார் ” முதல் போட்டியில் அவர் சரியாக இல்லை. ஆனால், இரண்டாவது போட்டியில் தவறை எல்லாம் உணர்ந்து கொண்டு தைரியமாக விளையாடி சதம் விளாசினார். ஒரு தந்தையாக நான் அதனை ரசித்த போது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. முதல் போட்டியில் அவர் சரியாக விளையாடாததை நினைத்து வேதனையில் இருந்தார்.
சிக்ஸர் அடிக்க சென்று அவுட் ஆகிவிட்டோம் கொஞ்சம் பொறுமையாக விளையாடவேண்டும் என்று அவருக்கு எண்ணம் வந்து இருப்பதாக நான் நினைக்கிறன். நான் அவருக்கு சொல்லும் ஒரு விஷயம் என்னவென்றால் அவருடைய ஸ்டைல் சிக்ஸர்கள் விளாசுவது தான். எனவே, அதனை மாற்றிக்கொள்ளாமல் தைரியமாக விளையாடினாள் போதும். அவருடைய சிக்ஸர் அடிக்கும் திறமைதான் இங்கு வருவதற்கு உதவியிருக்கிறது என்பதை நினைவுபடுத்தினேன்.
எனவே, அந்த திறமையை எப்போதும் விட்டுவிடாமல் விளையாடவேண்டும். என்ன நடந்தாலும் அதை மட்டும் மாற்றக்கூடாது என்பது தான் என்னுடைய ஆசை. வரும் போட்டிகளும் அவர் இன்னும் சிறப்பாக விளையாடுவார் என்று நான் நினைக்கிறன்” எனவும் அபிஷேக் சர்மாவின் தந்தை ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.
துபாய் : டி20 மகளிர் கோப்பைத் தொடரில் இன்று நடைபெற்ற 8-வது போட்டி துபாயில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
சென்னை : பிக் பாஸ் தமிழ் சீசன் நிகழ்ச்சி எப்போது தொடங்கும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில், தற்போது…
குவாலியர் : வங்கதேச அணி, இந்தியாவில் மேற்கொண்டு வரும் சுற்று பயணத்தில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 2-0 என…
துபாய் : நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரின் இன்றைய 7-வது போட்டியில் இந்திய மகளிர் அணியும், பாகிஸ்தான் மகளிர்…
ஷார்ஜா : நடைபெற்று வரும் டி20 உலககோப்பைத் தொடரின் இன்றைய போட்டியில் வங்கதேச மகளிர் அணியும், இங்கிலாந்து மகளிர் அணியும்…
ஷார்ஜா : நடைபெற்று வரும் மகளிர் டி20 உலகக்கோப்பைத் தொடரின் 5-வது போட்டியான இன்று ஆஸ்திரேலிய மகளிர் அணியும், இலங்கை…