நியூஸிலாந்து – பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரை 0-3 என்ற கணக்கில் பங்களாதேஷ் அணியை ஒயிட் வாஷ் செய்தது நியூஸிலாந்து அணி.
நியூஸிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட பங்களாதேஷ் அணி, 3 ஒருநாள், 3 டி-20 தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் ஒருநாள் தொடரின் மூன்றாம் மற்றும் இறுதிப்போட்டி, வெல்லிங்டனில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி, பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய நியூஸிலாந்து அணி, 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 318 ரன்கள் எடுத்தது.
319 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பங்களாதேஷ் அணி களமிறங்கியது. தொடக்கம் முதலே சொதப்பிய பங்களாதேஷ் அணி, 42.4 ஓவர்கள் முடிவில் தனது அனைத்து விக்கெட்களை இழந்து 154 ரன்கள் மட்டுமே அடித்து தோல்வியடைந்தது. இதன்மூலம் நியூஸிலாந்து அணி, 0-3 என்ற கணக்கில் இந்த தொடரை கைப்பற்றி, பங்களாதேஷ் அணியை ஒயிட் வாஷ் செய்தது.
சென்னை : கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழகத்தை உலுக்கிய ஒரு பயங்கரமான பாலியல் வன்கொடுமை வழக்கு தெரியவந்தது.…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்…
டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் எல்லையில், குறிப்பாக ஜம்மு-காஷ்மீர் பகுதியில், கடந்த சில ஆண்டுகளாகவே பதற்றம் நீடித்து வருகிறது. இந்தப் பதற்றம்,…
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…