ishan kishan [File Image]
ஐபிஎல் 2024 : இஷான் கிஷன் செஞ்ச காரியத்தை பார்த்து கலாய்க்கும் நெட்டிசன்கள்
நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி 3 போட்டிகள் விளையாடி அந்த 3 போட்டிகளிலும் தொடர்ச்சியாக தோல்வியை சந்தித்து புள்ளி விவரப்பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கிறது. மும்பை அணியின் பார்ம் மிகவும் மோசமாக இருக்கும் நிலையில், அடுத்த போட்டியில் வெற்றிபெற்று கம்பேக் கொடுக்கும் முனைப்போடு பயிற்சி எடுத்து வருகிறது.
கடைசியாக நேற்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக மும்பை அணி விளையாடியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 125 ரன்கள் எடுத்தது. அடுத்ததாக 126 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 15.3 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 127 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இந்த போட்டியில் தோல்வி அடைந்ததை தொடர்ந்து அடுத்ததாக மும்பை இந்தியன்ஸ் அணி வருகின்ற ஏப்ரல் 7-ஆம் தேதி டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிராக வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ள போட்டியில் விளையாட தயாராகி வருகிறது. இதற்கிடையில் இஷான் கிஷன் செய்த விஷயம் நெட்டிசன்கள் கலாய்க்கும் விதமாக அமைந்துள்ளது.
அது என்னவென்றால், மும்பை விமான நிலையத்தில் இஷான் கிஷன் சூப்பர் மேன் போன்ற உடை அணிந்துகொண்டு வந்தது வேடிக்கையாக இருந்தது. இது தொடர்பான வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த பலரும் மூன்று போட்டியில் தோல்வி அடைந்தது பற்றி கொஞ்சம் கூட கவலை இல்லை போல என கலாய்த்து வருகிறார்கள்.
பஹல்காம் : நேற்று ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதல்…
பஹல்காம் : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் நாட்டையே உலுக்கியுள்ளது. பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்பான…
பஹல்காம் : ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளை பிடிக்க ராணுவத்தினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். ட்ரோன்கள், மோப்ப நாய்கள் உதவியுடன்…
பஹல்காம் : ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதல் சம்பவம்…
ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில் ஏப்ரல் 22 மாலை நடந்த பயங்கரவாத தாக்குதலில்…
நாட்டையே உலுக்கிய ஜம்மு-காஷ்மீர் பாஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட பயங்கர பயங்கரவாதத் தாக்குதலுக்கு ஒரு நாள் கழித்து, பாகிஸ்தான்…