சூர்யா இப்படி விளையாடினாள் எல்லா போட்டியிலும் வெற்றி தான்! புகழ்ந்த முன்னாள் வீரர்!

Published by
பால முருகன்

டி20 உலகக்கோப்பை : கிரிக்கெட் போட்டிகள் விறு விறுப்பாக நடைபெற்று கொண்டு இருக்கும் நிலையில், ஜூன் 12-ஆம் தேதி நடைபெற்ற போட்டியில் இந்திய அணியும் அமெரிக்கா அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்த நிலையில், முதலில் பேட்டிங் செய்த அமெரிக்கா அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 110 ரன்களை மட்டுமே எடுத்தது.

அடுத்ததாக 111 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 18. 2 ஓவர்களில் 111 ரன்களை எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதோடு சூப்பர் 8 சுற்றுக்கும் தகுதி பெற்றது. இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமே சூர்யாகுமார் யாதவ் என்று கூறலாம். ஏனென்றால், கடைசி வரை களத்தில் நின்று 49 பந்துக்கு 50 ரன்கள் எடுத்து அணியை வெற்றி பாதைக்கு கொண்டு சென்றார்.

நிதானமான விளையாடி இந்திய அணியை வெற்றிபெற வைத்த சூர்யாகுமார் யாதவ்  பேட்டிங் பற்றி இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டபோது புகழ்ந்து பேசியுள்ளார். இது குறித்து பேசிய நவ்ஜோத் சிங் சித்து “ஒரு போட்டியில் சூர்யகுமார் யாதவ் இந்த அளவுக்கு அருமையாக விளையாடுகிறார் என்றால் நிச்சியமாக அந்த போட்டியில் நீங்கள் போட்டியில் தோற்க முடியாது. அவர் விளையாடும் போட்டிகளில் 50 ரன்களுக்கு மேல் எடுக்கிறார் என்றால், கண்டிப்பாக நான் சொல்வேன் தவறாமல் நீங்கள் போட்டியில் வெற்றி பெறுவீர்கள்.

நான் எதற்காக இந்த அளவுக்கு உறுதியாக சொல்கிறேன் என்றால் அடிக்கும் வேகத்தால். தான் நான் சொல்கிறேன்.அவர் 20 அல்லது 22 ரன்களில் பேட்டிங் செய்ய வந்த போது 22 லிருந்து 52 ரன்களுக்கு எவ்வளவு விரைவாக சென்றார் என்பதை  பார்த்திருப்பீர்கள். அவர் ஒரு சிக்ஸர் ஓவர் கவரில், பின்னர் மற்றொரு சிக்ஸர் மற்றும் அதற்குப் பிறகு ஒரு பவுண்டரி அடித்தார். இப்படியே அவர் விளையாடினாள் இந்திய அணி தோல்விக்கு வாய்ப்பு இருக்காது எல்லா போட்டிகளிலும் வெற்றிபெறும்” என்றும் நவ்ஜோத் சிங் சித்து தெரிவித்துள்ளார்.

Published by
பால முருகன்

Recent Posts

ENGvsAUS : “நான் நினைத்தபடி திரும்பி வந்திருக்கிறேன்”! ஜோப்ரா ஆர்ச்சர் நெகிழ்ச்சி பேட்டி..!

லார்ட்ஸ் : இங்கிலாந்து அணியின் முக்கிய தூணாக விளங்கும் வேக பந்து வீச்சாளரான ஜோப்ரா ஆர்ச்சர் கடந்த 2019 உலகக் கோப்பை…

2 hours ago

ENGvsAUS : “அவரிடமிருந்து இங்கிலாந்து அதை தான் எதிர்பார்க்கிறது”! ஸ்டூவர்ட் பிரோட் பெருமிதம்!

சென்னை : இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கே இடையே நடைபெற்று வரும் ஒருநாள் தொடரில் நேற்று 4-வது போட்டியானது நடைபெற்றது.…

3 hours ago

தமிழக மீனவர்களை விடுவிக்க அமைச்சர் ஜெய்சங்கருக்கு ராகுல் காந்தி கடிதம்.!

டெல்லி : இலங்கையில் புதிய ஆட்சி அமைந்த பின் இலங்கை கடற்படையினரின் ரோந்து அதிகரித்திருப்பதாக தமிழக மீனவர்கள் புகார்கள் அதிகரித்துள்ளது.…

3 hours ago

தேர்தல் பத்திரங்கள் மூலம் மிரட்டல்.? நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு.!

பெங்களூரு : தேர்தல் பத்திரங்கள் மூலம் பிரதான அரசியல் கட்சிகள் தேர்தல் நிதி (நன்கொடை) பெற்றுக்கொள்ளலாம் என்ற விதிமுறையை கடந்த…

3 hours ago

SLVsNZ : சாதனைப் படைத்த கமிந்து! இலங்கை சுழலில் சிக்கி திணறும் நியூசிலாந்து!

காலி : நியூஸிலாந்து அணி இலங்கை அணியுடன் 2 டெஸ்ட் போட்டிகள் அடங்கிய சுற்றுப்பயணத் தொடரை விளையாடி வருகிறது. இந்த…

4 hours ago

“வாட்ஸ்அப் கூட யூஸ் பண்ண முடியல”…ஆர்த்தியின் கொடுமைகள்? கண்கலங்கிய ஜெயம் ரவி!!

சென்னை : ஜெயம் ரவி தன்னுடைய மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதாகக் கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்து இருந்தார்.…

4 hours ago