கிரிக்கெட் வீரர் நடராஜன் தனது சொந்த கிராமமான சின்னப்பம்பட்டியில் கிரிக்கெட் மைதானம் ஒன்றை அமைத்து வருகிறார்.
சேலம் மாவட்டம், சின்னப்பம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கிரிக்கெட் வீரர் நடராஜன். இவர் முதன் முதலில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி. பின் தமிழக அளவிலான டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியில் அறிமுகமானார்.
அதில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர், இந்திய அளவிலான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் விளையாடினார். இந்த நிலையில், கடந்த ஆண்டு இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பிடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வந்தது.
இந்நிலையில், தற்போது அவர் தனது சொந்த கிராமமான சின்னப்பம்பட்டியில் கிரிக்கெட் மைதானம் ஒன்றை அமைத்து வருகிறார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘எனது கிராமம் சின்னப்பம்பட்டியில் அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய புதிய கிரிக்கெட் மைதானம் அமைத்து வருகிறேன் என கிரிக்கெட் வீரர் நடராஜன் ட்வீட் செய்துள்ளார். நடராஜன் கிரிக்கெட் மைதானம் என இம்மைதானத்திற்கு பெயர் சூட்டப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார். சென்ற வருடம் டிசம்பர் மாதம் இந்திய அணிக்காக களமிறங்கினேன், இந்த வருடம் டிசம்பரில் கிரிக்கெட் மைதானம் அமைத்து வருகிறேன்..! கடவுளுக்கு நன்றி’ என பதிவிட்டுள்ளார்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…