ரிக்கி பாண்டிங் இருப்பதால் என்னுடைய கேப்டன்சி சிறப்பாக இருக்கிறது என்று டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் தெரிவித்துள்ளார்.
நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் – டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங் தேர்வு செய்தது அதன் படி, முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் எடுத்தனர். 138 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி 19. 1 ஓவர்களில் 138 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசியத்தில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியை தொடர்ந்து டெல்லி அணி புள்ளிவிவரப்பட்டியலில் 2 வது இடத்திற்கு சென்றது. இந்த நிலையில், போட்டி முடிந்தவுடன் பேசிய டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் கூறியது ” என்னுடைய கேப்டன்சி பணியை நான் சிறப்பாக செய்வதாக உணர்கிறேன். அணியில் பிற மூத்த வீரர்கள் இருப்பது எனக்கு அணியை வழிநடத்த பெரிதும் உதவியது. என்னுடைய கேப்டன்சி ரிக்கி பாண்டிங் இருப்பதால் சிறப்பாக இருக்கிறது. ஒரு விக்கெட் கீப்பராக நான் விளையாட்டைப் படித்துக்கொண்டே இருக்கிறேன். கொரோனா காலகட்டத்தில் கிரிக்கெட் விளையாடுவது ஒரு சவலாகத்தான் இருக்கிறது, ஆனால் ஒரு அணியாக இப்போது நாங்கள் அணிக்கு வெளிய நடப்பது குறித்து யோசிக்கவில்லை. பிசிசிஐ எங்களை மிகவும் பாதுகாப்பாக வைத்திருக்கிறது அதனால் கிரிக்கெட்டை பற்றி மட்டுமே யோசிக்கிறோம்” என்றும் ரிஷப் பண்ட் கூறியுள்ளார்.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…