முரளி விஜய், சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவிப்பு.!

Published by
Muthu Kumar

இந்தியாவின் முன்னணி கிரிக்கெட் வீரரான முரளி விஜய், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார்.

இந்திய அணியின் தொடக்க வீரரான தமிழகத்தைச் சேர்ந்த முரளி விஜய், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தனது ஓய்வு முடிவை அறிவித்துள்ளார். 38 வயதான மூத்த இந்திய வீரரான முரளி விஜய், இந்திய அணிக்காக 2002 முதல் அறிமுகமாகி கிரிக்கெட் விளையாடி வருகிறார். அவர் 61 டெஸ்ட்களில் விளையாடி 12 சதம், 15 அரை சதங்களுடன் 3982 ரன்கள்(சராசரி- 38.28) குவித்துள்ளார். 17 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள அவர், 339 ரன்கள் குவித்துள்ளார். ஐபிஎல் இலும் சென்னை அணிக்காக விளையாடியுள்ள முரளி விஜய், தனது முத்திரை பதித்திருக்கிறார். ஐபிஎல்லில் 106 போட்டிகளில், இரண்டு சதங்கள் உட்பட  121.87 ஸ்ட்ரைக் ரேட்டில் மொத்தம் 2619 ரன்கள் குவித்துள்ளார்.

இந்திய அணியின் டெஸ்ட் தொடக்க வீரராக களமிறங்கி விளையாடி வந்த விஜய், 2018க்கு பிறகு மோசமான ஆட்டத்திற்கு பிறகு இந்திய அணியில், நிரந்தர இடம் கிடைக்காமல் அவ்வப்போது ஓரங்கட்டப்பட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து முரளி விஜய், இன்று சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து தனது ஓய்வு முடிவை அறிவித்திருக்கிறார். விஜய் தனது ட்வீட்டில், இந்தியாவிற்கு விளையாடும் மிகப்பெரிய வாய்ப்பு கிடைத்ததற்கு நன்றி கூறி, தனக்கு ஆதரவளித்த அனைத்து வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்தார். மேலும் இந்திய அணி தனது வரும்காலங்களில் சிறந்து செயல்பட வாழ்த்துகள் கூறி, தான் வாழ்க்கையின் அடுத்த நகர்வை நோக்கி பயணிக்க உள்ளதாக மேலும் தெரிவித்தார்.

Published by
Muthu Kumar

Recent Posts

வாரத்தின் இறுதி நாளில் சற்று குறைந்த தங்கம் விலை! இன்றைய நிலவரம் இதோ…

வாரத்தின் இறுதி நாளில் சற்று குறைந்த தங்கம் விலை! இன்றைய நிலவரம் இதோ…

சென்னை : வார இறுதி நாளான இன்று சற்று இறக்கத்தில் சென்றுள்ளது தங்கம் விலை. அதன்படி, சவரனுக்கு ரூபாய் 40…

12 mins ago

லெபனான் மீது தீவிரமடையும் தாக்குதல்! போர் நிறுத்தத்திற்கு மறுப்பு தெரிவித்த இஸ்ரேல் பிரதமர்!

லெபனான் : இஸ்ரேல் மற்றும் லெபனான் நாட்டிற்கு இடையேயான போர் தொடங்கி ஒரு ஆண்டு நெருங்கி வருகிறது. கடந்த ஆண்டு…

28 mins ago

“போட்டி இருக்கனும்..நான் இப்படி தான்”…மணிமேகலைக்கு பதில் சொன்ன பிரியங்கா!!

சென்னை : ஒரு குடும்பத்தில் அக்கா -தங்கை சண்டைபோடுவது போல குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் மணிமேகலை மற்றும் பிரியங்கா…

36 mins ago

ஆதவ் அர்ஜுனா பேசியது தவறில்லை.? திருமாவளவன் கூறியதென்ன.?

சென்னை : கடந்த ஜனவரியில் விசிக கட்சியில் இணைந்து குறுகிய காலத்திற்குள் விசிகவின் துணை பொதுச்செயலாளர் என்ற பொறுப்பிற்கு வந்தவர்…

41 mins ago

குளிரும் தமிழகம்.. 19 மாவட்டங்களுக்கு கனமழை அலர்ட் கொடுத்த வானிலை மையம்.!

சென்னை: தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்றிரவு கனமழை பெய்தது. குறிப்பாக, சென்னை போரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து…

50 mins ago

ENGvsAUS : தொடரை சமன் செய்த இங்கிலாந்து! 186 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தல்!

லார்ட்ஸ் : இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் சுற்றுப்பயணத்தில் ஒருநாள் தொடரானது நடைபெற்று வருகிறது. இதற்கு…

10 hours ago