இன்றைய 27-வது போட்டியில் மும்பை Vs டெல்லி அணிகள் மோதியது. இப்போட்டி ஷேக் சயீத் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங் தேர்வு செய்தது.
டெல்லி அணியின் தொடக்க வீரர்களாக பிருத்வி ஷா, தவான் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடக்கத்திலே பிருத்வி ஷா 4 ரன் எடுத்து வெளியேறினார். பின்னர், இறங்கிய ரஹானே 15 ரன் மட்டுமே எடுக்க இதைத்தொடர்ந்து, களம் கண்ட ஸ்ரேயாஸ் ஐயர் சிறப்பாக விளையாடி அரைசதம் அடிக்காமல் 42 ரன் எடுத்து விக்கெட்டை இழந்தார்.
தொடக்க வீரராக இறங்கிய தவான் நிதானமாகவும், அதிரடியாவும் விளையாடி 69 ரன்கள் குவித்தார். இறுதியாக டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டை இழந்து 162 ரன்கள் எடுத்தனர். மும்பை அணி 163 ரன்கள் இலக்குடன் தொடக்க வீரர்களாக குயின்டன் டி கோக், ரோஹித் இருவரும் களமிறங்க ஆட்டம் தொடக்கத்திலே 5 ரன் எடுத்து வெளியேறினார்.
இவரை தொடர்ந்து, சூர்யகுமார் யாதவ் களமிறங்க குயின்டன் டி கோக் இருவரும் கூட்டணி அமைத்து அதிரடியாக விளையாடி அணியின் எண்ணிக்கையை உயர்த்தினர். இருவருமே 53 ரன்னில் தங்களது விக்கெட்டை இழந்தனர். பின்னர், இறங்கிய இஷான் கிஷன் 28 ரன் எடுக்க இறுதியாக மும்பை அணி 5 விக்கெட்டை இழந்து 19.4 ஓவர் முடிவில் 166 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதனால், மும்பை புள்ளி பட்டியலில் 10 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் உள்ளது.
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் கொல்கத்தா ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், லக்னோ…
சென்னை : மானிய கோரிக்கைகள் தொடர்பான விவாதத்திற்கு தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. போக்குவரத்து துறை சார்பான கோரிக்கைகளுக்கு…
சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு…
மும்பை : மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் ஆர்சிபி அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.…
சென்னை : தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும், தமிழகத்தில் ஆளும் பொறுப்பில் உள்ள திமுக அரசுக்கும் இடையேயான பனிப்போர் ஊரறிந்ததே. இதனாலேயே…
சென்னை : புஷ்பா திரைப்படம் மூலம் பான் இந்தியா அளவில் ஆக்ஷன் ஹீரோவாக தடம் பதித்த அல்லு அர்ஜூனுக்கு இன்று…