மும்பை அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 131 ரன்கள் எடுத்தனர்.
இன்று ஐபிஎல் தொடரின் 17 வது லீக் போட்டியில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் மும்பை அணியும், பஞ்சாப் அணியும் சென்னை சேப்பாக் மைதானத்தில் மோதி வருகிறது. டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்வு செய்தனர்.
இதைத்தொடர்ந்து,மும்பை அணியில் தொடக்க வீரராக குயின்டன் டி கோக் , ரோஹித் சர்மா இருவரும் களமிறங்கினார். ஆனால் ஆட்டம் தொடக்கத்திலேயே குயின்டன் டி கோக் 3 ரன் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார். இதைத் தொடர்ந்து களமிறங்கிய இஷான் கிஷன் 6 ரன்களில் வெளியேற மும்பை அணி 26 அணி 2 விக்கெட்டை பறிகொடுத்து இருந்தது. இதைத்தொடர்ந்து களமிறங்கிய பின்னர் சூர்யகுமார் யாதவ், ரோஹித் சர்மா உடன் கூட்டணி அமைத்து அணியின் எண்ணிக்கையை சற்று உயர்த்தினர்.
அதிரடியாக விளையாடி வந்த ரோகித் சர்மா அரைசதம் விளாசினார். சிறப்பாக ஆடிய சூர்யகுமார் யாதவ் 33 ரன்னில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்த சில நிமிடங்களில் ரோகித் சர்மா 63 தனது விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். பின்னர் களமிறங்கிய ஹார்திக் பாண்டியா 1, க்ருனல் பாண்டியா 3 ரன்கள் எடுத்து வெளியேறினர்.
இறுதியாக மும்பை அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 131 ரன்கள் எடுத்தனர். 132 ரன்கள் இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்கவுள்ளது.
கீவ் : உக்ரைன் - ரஷ்யா போரானது நீண்ட மாதங்களாக நடைபெற்று வருகிறது. அமெரிக்க ராணுவ உதவியுடன் உக்ரைன், போரை…
சான் பிராசிஸ்கோ : உலகளாவிய பிரபல சமூக வலைதளமான எக்ஸ் (டிவிட்டர்) கடந்த சில மணிநேரங்களுக்கு முன்னர் தொழில்நுட்ப கோளாறு…
சென்னை : மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற மதநல்லிணக்க நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்,…
பீகார் : இன்று பட்டப்பகலில் பீகார் மாநிலம் போஜ்பூர் மாவட்டத்தில் உள்ள அர்ரா பகுதி காவல் நிலைய எல்லைக்கு உட்பட…
சென்னை : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மும்மொழிக் கொள்கை குறித்த விவாதத்தில் பேசிய மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான், திமுக…
கோவை : கடந்த மார்ச் 7ஆம் தேதியன்று இஸ்லாமியர்கள் விழாவான ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் சென்னை…