நேற்று நடந்த போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் புள்ளிபட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது.
நடப்பாண்டுக்கான ஐபிஎல் தொடர் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், நேற்று நடைபெற்ற போட்டியில் மும்பை இந்தியன்ஸ் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் சென்னை சேப்பாக் மைதானத்தில் மோதியது இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது.
அதன்படி மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் அடித்தது. அடுத்ததாக 151 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற நோக்குடன் களமிறங்கிய ஹைதராபாத் அணி 19.4 ஓவர்களில் தனது அணைத்து விக்கெட்களையும் இழந்து 137 ரன்கள் மட்டுமே எடுத்து. இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இந்த வெற்றியை தொடர்ந்து மும்பை இந்தியன்ஸ் அணி புள்ளிபட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது. இதுவரை 3 போட்டிகள் விளையாடி 2 போட்டிகளில் மும்பை அணி வெற்றி பெற்றுள்ளது . அடுத்தது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 2 போட்டிகள் விளையாடி இரண்டு போட்டிகளும் வெற்றி பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளது.
மூன்றாவது இடத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், நான்காவது இடத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ், ஐந்தாவது இடத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், ஆறாவது இடத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ஏழாவது இடத்தில் பஞ்சாப் கிங்ஸ், எட்டாவது இடத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் உள்ளது.
குஜராத் : மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் தலைவருமான ராகுல் காந்தி குஜராத்திற்கு இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். தனது…
துபாய் : துபாயில் நாளை நடைபெறவுள்ள ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதவுள்ளன. இந்தியா மற்றும்…
சென்னை : தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தவெக சார்பில் மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களுக்கு விழிப்புணர்வு பேரணி மற்றும் தமிழக…
சென்னை : பெண்களுக்கு முழுமையான பாதுகாப்பை ஏற்படுத்தித் தர வேண்டும் எனத் தமிழ்நாடு அரசை வலியுறுத்தி, தவெக சார்பில் தமிழ்நாடு…
சென்னை : இன்று சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற ‘உலக மகளிர் தின விழாவில், சென்னை மாநகரத்தில்…
நாகை : நாகை மாவட்டம் கீழையூர் அருகே கருங்கண்ணி ஊராட்சியைச் சோ்ந்த 26 பேருக்கு முதல்வர் நிகழ்ச்சியின் போது வழங்கப்படுவதாக…