#MIvRR: தொடர் தோல்வியில் இருந்து தப்புமா மும்பை?? 172 ரன்களை இலக்காக நிர்ணயித்த ராஜஸ்தான்!

Default Image

ஐபிஎல் தொடரில் மும்பை – ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி, 20 ஓவர்கள் முடிவில் 171 ரன்கள் அடித்தது.

ஐபிஎல் தொடரில் தற்பொழுது நடைபெற்று வரும் 24-வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ்- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதி வருகிறது. டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி, பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

அதன்படி ஜோஸ் பட்லர் – ஜெய்ஸ்வால் களமிறங்கினார்கள். தொடக்கம் முதலே சிறப்பாக ஆடிவந்த பட்லர் 3 சீக்ஸ், 3 பவுண்டரிகள் அடித்து 41 ரன்கள் குவித்து தனது விக்கெட்டை இழந்தார். அவரைதொடர்ந்து சஞ்சு சாம்சன் களமிறங்க, ஜெய்ஸ்வாலுடன் இணைந்து அதிரடியாக ஆடினார். 32 ரன்களுக்கு ஜெய்ஸ்வால் வெளியேற, அதிரடியாக ஆடிவந்த சஞ்சு சாம்சன், 42 ரன்கள் அடித்து தனது விக்கெட்டை இழந்தார். மத்தியில் ஆடிவந்த சிவம் துபே, 42 ரன்கள் அடித்து பெவிலியன் திரும்பினார்.

இறுதியாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக சஞ்சு சாம்சன் 42 ரன்களும், ஜோஸ் பட்லர் 41 ரன்களும் அடித்தனர். தற்பொழுது 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணி களமிறங்கவுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்