Hardik Pandya spoke about the win [image source: ipl/jio cinema]
ஐபிஎல்2024: மீண்டெழ ஒரே ஒரு வெற்றி தேவை என அனைவரும் நம்பினோம் என்று முதல் வெற்றியை ருசித்த மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியா கூறியுள்ளார்.
ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் மோதியது. இதில் குறிப்பாக தொடர் தோல்வியில் இருந்து மும்பை அணி நேற்று களமிறங்கியது.
இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 234 ரன்களை குவித்தது. இதையடுத்து இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் அடித்து தோல்வி அடைந்தது.
இதன்மூலம் 29 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி நடப்பு சீசனில் முதல் வெற்றியை பதிவு செய்தது. இந்த நிலையில், வெற்றி குறித்து மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பேட்டியளித்தார் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது, இது மிகவும் கடினமான உழைப்பு.
இந்த சீசனுக்காக எங்கள் அணியின் விளையாடும் 12 வீரர்களை சில வியூகங்களின் அடிப்படையில் அமைத்து வந்தோம். மனதளவில் நாங்கள் தெளிவாக இருக்க வேண்டி சூழல் இருந்தது. எங்களுக்குள் அன்பும், ஆதரவும் அதிகம் உள்ளது. அதை டிரஸ்ஸிங் ரூமில் பார்க்க முடிகிறது. சரியான நேரத்தில் எங்கள் அணியை செட்டில் செய்வது அவசியம். அந்த வகையில் இதுவே எங்களது அணியாக இருக்கும் என நம்புகிறேன்.
தோல்வியில் இருந்து மீண்டெழ எங்களுக்கு ஒரே ஒரு வெற்றி தேவை என்று அனைவரும் நம்பினோம். இன்று ஒரு அற்புதமான தொடக்கமாக இருந்தது. முதல் 6 ஓவர்களில் 70 ரன்களை எடுப்பது எப்போதும் அற்புதமானது. வாய்ப்பு வரும் போது எங்கள் அணி வீரர்கள் அனைவரும் ரன் எடுத்ததை பார்க்க நன்றாக இருந்தது.
ரொமாரியோ ஷெப்பர்ட் அதிரடியாக விளையாடினர். அவர் தான் எங்களுக்கு இந்த வெற்றியை பெற்றுக் கொடுத்தார். டெல்லிக்கும் எங்களுக்கும் இடையிலான ரன் வித்தியாசம் ஷெப்பர்ட் குவித்த அந்த ரன்கள் தான். நான் சரியான நேரத்தில் பந்து வீசுவேன். இன்றைய போட்டியில் அதற்கு தேவை ஏற்படவில்லை என தெரிவித்தார்.
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் , பஞ்சாப் கிங்ஸ் அணியும் விளையாடின. இதில்…
லக்னோ : இன்று ஐபிஎல் 2025 போட்டியில் இன்றைய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும்…
லக்னோ : இன்று (ஏப்ரல் 1) நடைபெறும் ஐபிஎல் 2025 சீசனின் 13வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ்…
சென்னை : தமிழ் சினிமாவில் கமர்சியல் படங்கள் மூலம் எடுத்து ஹிட் கொடுத்து சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் இயக்குனர்…
லக்னோ : தேசிய கல்வி கொள்கை 2020-ல் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய கோட்பாடுகளில் ஒன்று மும்மொழி கொள்கை. இந்த மும்மொழி கொள்கை…
கேரளா : மலையாள நடிகர் மோகன்லாலின் ''எம்புரான்'' படம் ஒரு புறம் வசூல் சாதனை செய்தாலும், மறுபுறம் சர்ச்சைகளால் சூழந்துள்ளது.…