இன்று நடைபெறும் 20-வது ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் , ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதியது. இந்த போட்டி அபுதாபியில் உள்ள ஷேய்க் சையத் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற மும்பை பேட்டிங்கை தேர்வு செய்தது.
மும்பை அணியில் தொடக்க வீரர்களாக குயின்டன் டி காக், ரோஹித் சர்மா இருவரும் இறங்கினர். நிதானமாக விளையாடிய குயின்டன் டி காக் 23 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார். பின்னர், சிறிது நேரத்திலே ரோஹித் 35 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார்.
இதைத்தொடர்ந்து, இறங்கிய சூர்யகுமார் யாதவ் அதிரடியாக விளையாடி79 * ரன்கள் குவித்து கடைசிவரை களத்தில் நின்றார். பின்னர், இறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற இறுதியாக மும்பை அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டை இழந்து 193 ரன்கள் எடுத்தனர்.
194 ரன்கள் இலக்குடன் ராஜஸ்தான் அணியில் தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர் இருவரும் இறங்கினர். ஆனால், ரன் எடுக்காமல் ஜெய்ஸ்வால் தனது விக்கெட்டை இழந்தார்.
பின்னர், இறங்கிய ஸ்மித் 6 , சஞ்சு சாம்சன் ரன் எடுக்காமலும் பெவிலியன் திரும்பினர். அணி மோசமான நிலையில் இருந்தபோது, தொடக்க வீரர் ஜோஸ் பட்லர் அதிரடியாக விளையாடி அரைசதம் விளாசி 70 ரன்னில் விக்கெட்டை இழக்க பின்னர், களம் கண்ட அனைத்து வீரர்களும் சொற்ப ரன்னில் வெளியேற இறுதியாக ராஜஸ்தான் அணி 18.1 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டை இழந்து 136 ரன்கள் எடுத்து 57 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இதனால், மும்பை அணி புள்ளி பட்டியலில் 8 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் உள்ளது.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…