MS Dhoni filed a criminal case [file image]
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி, 15 கோடி ரூபாய் மோசடி செய்ததாக குற்றச்சாட்டை முன்வைத்து, 2 பேர் மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்துள்ளார். 2017ம் ஆண்டு கிரிக்கெட் அகாடமி அமைப்பது குறித்து தோனியுடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை மீறியதற்காக ஆர்கா ஸ்போர்ட்ஸ் மற்றும் மேனேஜ்மெண்ட் லிமிட்டெடை சேர்ந்த திவாஹர் மற்றும் விஷ்வாஷ் இருவர் மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்துள்ளார்.
ஆர்கா ஸ்போர்ட்ஸ் மற்றும் மேனேஜ்மென்ட்டை சேர்ந்த மிஹிர் திவாகர் மற்றும் சௌமியா விஷ்வாஷ் என்ற அதிகாரிகள் தோனிக்கு ரூ.15 கோடி மோசடி செய்ததாகக் கூறப்படுகிறது. மிஹிர் திவாகர் மற்றும் சௌமியா விஷ்வாஷ் ஆகிய இருவரும் 2017ம் ஆண்டு உலகளவில் கிரிக்கெட் அகாடமியை நடத்துவதற்கு ஒப்பந்தம் செய்ததாக கூறப்படுகிறது. ஆனால், ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளை இருவரும் கடைபிடிக்கவில்லை.
டாஸ் முடிஞ்சதுன்னு நினைச்சேன் போட்டியே முடிஞ்சது – கே.எல்.ராகுல் பேச்சு!
ஆர்கா ஸ்போர்ட்ஸ் ஒப்பந்தத்தின் விதிமுறைகளின்படி, உரிமை கட்டணத்தை செலுத்தவும், லாபத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும் என ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், அவைகளை நிறைவேற்றப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து பல்வேறு முறை நினைவூட்டல் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு, சட்டப்பூர்வ நோட்டீஸ்களும் அனுப்பப்பட்ட நிலையில், அவைகளும் புறக்கணிக்கப்பட்டன என தெரிவிக்கப்படுகிறது.
இதன் காரணமாக கடந்த 2021 ஆகஸ்ட் 15ம் தேதி ஆர்கா ஸ்போர்ட்ஸுக்கு வழங்கப்பட்ட சட்டப்பூர்வ கடிதத்தை எம்எஸ் தோனி திரும்பப்பெற்றார். இதுகுறித்து அவர்களுக்கு நோட்டீஸ்களை அனுப்பியும் பலனில்லை என்றும் ஒப்பந்த நிபந்தனைகள் மீறப்பட்டதால் தங்களுக்கு 15 கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறி முன்னாள் இந்திய அணி கேப்டன் எம்எஸ் தோனி தரப்பில் 2 பேர் மீது கிரிமினல் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் , பஞ்சாப் கிங்ஸ் அணியும் விளையாடின. இதில்…
லக்னோ : இன்று ஐபிஎல் 2025 போட்டியில் இன்றைய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும்…
லக்னோ : இன்று (ஏப்ரல் 1) நடைபெறும் ஐபிஎல் 2025 சீசனின் 13வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ்…
சென்னை : தமிழ் சினிமாவில் கமர்சியல் படங்கள் மூலம் எடுத்து ஹிட் கொடுத்து சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் இயக்குனர்…
லக்னோ : தேசிய கல்வி கொள்கை 2020-ல் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய கோட்பாடுகளில் ஒன்று மும்மொழி கொள்கை. இந்த மும்மொழி கொள்கை…
கேரளா : மலையாள நடிகர் மோகன்லாலின் ''எம்புரான்'' படம் ஒரு புறம் வசூல் சாதனை செய்தாலும், மறுபுறம் சர்ச்சைகளால் சூழந்துள்ளது.…