"MS.டோனிக்கு என்ன ஆச்சு" MS.டோனியால் அணிக்கு சீர்குலைவா..? பரபரப்பு பேட்டி

Default Image

விஜய் ஹசாரே டிராபி காலிறுதியில் ஜார்க்கண்ட் அணிக்காக எம்எஸ் டோனி ஏன் விளையாடவில்லை என்பதற்கு பயிற்சியாளர் விளக்கம் அளித்துள்ளார். 
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டோனி. டெஸ்டில் இருந்து ஓய்வு பெற்ற இவர் ஒருநாள் போட்டி மற்றும் 20 ஓவர் அணியில் விளையாடி வருகிறார். இங்கிலாந்து மற்றும் ஆசிய கோப்பையில் டோனியின் ஆட்டம் மோசமாக இருந்தது. இதனால் அவர் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறார்.
விஜய் ஹசாரே போட்டியில் டோனி ஆடாதது ஏன்?- ஜார்க்கண்ட் பயிற்சியாளர் விளக்கம்ஆனாலும் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் டோனி இடம் பெற்றுள்ளார். உள்ளூரில் நடைபெறும் விஜய் ஹசாரே போட்டியின் நாக்அவுட் சுற்றில் அவர் ஆடுவார் என்று கூறப்பட்டது. தற்போது டோனி விளையாடவில்லை என்ற கூறப்பட்டுள்ளது.
விஜய் ஹசாரே போட்டியில் அவர் ஆடவில்லை. இதுகுறித்து ஜார்க்கண்ட் அணியின் பயிற்சியாளர் ராஜீவ் குமார் கூறியதாவது:-
ஜார்க்கண்ட் அணி தற்போது சிறப்பாக விளையாடி வருகிறது. இந்த நேரத்தில் அணிக்குள் நுழைந்து சீர்குலைவு ஏற்படுத்த டோனி விரும்பவில்லை. அணி நல்ல நிலையில் இருப்பதால் அது அப்படியே நீடிக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார். இதனால் டோனி விஜய் ஹசாரே போட்டியில் ஆடவில்லை. அவர் ஆடுவதும், ஆடாமல் இருப்பதும் அவரது முடிவே.இவ்வாறு அவர் கூறினார்.ஜார்க்கண்ட் அணியின் பயிற்சியாளர் ராஜீவ் குமார் கூறியது டோனி ரசிகர்களை அதிர்ச்சியசடைய வைத்துள்ளது.
DINASUVADU 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்