414 பந்தில் 303 ரன்கள்.!முச்சதம் அடித்து அசத்திய மனோஜ் திவாரி..காட்டடியில் பெங்கால் 635 ரன்கள் குவிப்பு

Published by
kavitha
  • முதல் முறையாக முச்சதம் அடித்து  மனோஜ் திவாரி அசத்தல்
  • முத்சத்தத்தால் பெங்கால் 7 விக்கெட் இழப்பிற்கு 635 ரன்கள் குவித்து டிக்ளேர்

ரஞ்சி டிராபிக்கான ஆட்டத்தில் பெங்கால் – ஐதராபாத் இடையிலான ஆட்டமானது மேற்கு வங்காளத்தில் உள்ள கல்யாணி என்கிற இடத்தில் நடந்து வருகிறது. இதில் டாஸ் வென்ற பெங்கால் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. பேட்டிங்கில் களமிரங்கிய அந்த அணி 60 ரன்களுக்குள் 3 விக்கெட்டை இழந்து தடுமாறியது.அந்த நிலையில் 4வது விக்கெட்டுக்கு மனோஜ் திவாரியுடன் மஜும்தார் ஜோடிசேர்ந்தது.குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் அணியை இந்த ஜோடி சரிவில் இருந்து மீட்டது.  மனோஜ் திவாரி இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடினார். நேற்று முன் முதல் நாள் ஆட்டத்தில் பெங்கால் 5 விக்கெட் இழப்பிற்கு 366 ரன்கள் குவித்து இருந்தது.இதில் களத்தில் இருந்த மனோஜ்  156 ரன்களுடனும், சக்ரபோர்ட்டி ரன் ஏதுமெடுக்காமலும் களத்தில் இருந்தனர்.நேற்று 2வது நாள் ஆட்டமானது தொடங்கியது. தன் சதத்தை இரட்டை சதமாக மாற்றினார் மனோஜ்.தொடர்ந்து களத்தில் களைப்பின்றி விளையாடிய மனோஜ் முதன்முறையாக தனது முச்சதத்தையும் பதிவு செய்து அசத்தினார். தான் எதிர்கொண்ட 414 பந்தில் 303 ரன் களை குவித்து பார்வையாளர்களையும் கிரிக்கெட் விமர்சகர்களையும் மிரளவைத்தார்.இவரது அதிரடி முச்சதத்தால் பெங்கால் 7 விக்கெட் இழப்பிற்கு 635 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இமாலய இலக்கை நோக்கி ஜதராபாத் களமிரங்க உள்ளது.

Recent Posts

அமித்ஷா vs எடப்பாடி பழனிச்சாமி! 2026-ல் கூட்டணி ஆட்சியா? என்ன சொன்னார்கள்?

அமித்ஷா vs எடப்பாடி பழனிச்சாமி! 2026-ல் கூட்டணி ஆட்சியா? என்ன சொன்னார்கள்?

சென்னை : தமிழ்நாட்டில் பிரதான கட்சிகள் (அதிமுக, திமுக) கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்து இருந்தாலும் , தேர்தல் முடிந்த…

31 seconds ago

ஏப்ரல் 16 ஐபிஎல் “சூப்பர் ஓவர்” நாளா? மீண்டும் மீண்டும் அதே நாளில் டெல்லிக்கு நடந்த சம்பவம்!

டெல்லி : நேற்றைய ஐபிஎல் ஆட்டத்தில் அக்சர் படேல் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான்…

36 minutes ago

பரபரப்பாக மேட்ச்.., சூப்பர் ஓவரில் ராஜஸ்தானை வீழ்த்தி திரில் வெற்றி பெற்ற டெல்லி.!

டெல்லி : ஐபிஎல் தொடரின் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது.…

8 hours ago

நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!

நெல்லை : 2023ஆம் ஆண்டு நாங்குநேரியில் தாக்குதலுக்குள்ளான பட்டியலின மாணவன் சின்னதுரை மீது, மர்ம நபர்கள் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.…

9 hours ago

மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!

டெல்லி : ஐபிஎல் தொடரின் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்று…

10 hours ago

“விஜய்யிடமிருந்து முஸ்லிம்கள் தள்ளி இருங்கள்” – அகில இந்திய முஸ்லிம் ஜமாத்.!

சென்னை : கடந்த மார்ச் 7ம் தேதி தவெக சார்பில் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடத்தப்பட்ட இப்தார் நோன்பு…

11 hours ago