414 பந்தில் 303 ரன்கள்.!முச்சதம் அடித்து அசத்திய மனோஜ் திவாரி..காட்டடியில் பெங்கால் 635 ரன்கள் குவிப்பு

Default Image
  •  முதல் முறையாக முச்சதம் அடித்து  மனோஜ் திவாரி அசத்தல்
  • முத்சத்தத்தால் பெங்கால் 7 விக்கெட் இழப்பிற்கு 635 ரன்கள் குவித்து டிக்ளேர் 

ரஞ்சி டிராபிக்கான ஆட்டத்தில் பெங்கால் – ஐதராபாத் இடையிலான ஆட்டமானது மேற்கு வங்காளத்தில் உள்ள கல்யாணி என்கிற இடத்தில் நடந்து வருகிறது. இதில் டாஸ் வென்ற பெங்கால் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. பேட்டிங்கில் களமிரங்கிய அந்த அணி 60 ரன்களுக்குள் 3 விக்கெட்டை இழந்து தடுமாறியது.அந்த நிலையில் 4வது விக்கெட்டுக்கு மனோஜ் திவாரியுடன் மஜும்தார் ஜோடிசேர்ந்தது.குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் அணியை இந்த ஜோடி சரிவில் இருந்து மீட்டது.  மனோஜ் திவாரி இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடினார். நேற்று முன் முதல் நாள் ஆட்டத்தில் பெங்கால் 5 விக்கெட் இழப்பிற்கு 366 ரன்கள் குவித்து இருந்தது.இதில் களத்தில் இருந்த மனோஜ்  156 ரன்களுடனும், சக்ரபோர்ட்டி ரன் ஏதுமெடுக்காமலும் களத்தில் இருந்தனர்.நேற்று 2வது நாள் ஆட்டமானது தொடங்கியது. தன் சதத்தை இரட்டை சதமாக மாற்றினார் மனோஜ்.தொடர்ந்து களத்தில் களைப்பின்றி விளையாடிய மனோஜ் முதன்முறையாக தனது முச்சதத்தையும் பதிவு செய்து அசத்தினார். தான் எதிர்கொண்ட 414 பந்தில் 303 ரன் களை குவித்து பார்வையாளர்களையும் கிரிக்கெட் விமர்சகர்களையும் மிரளவைத்தார்.இவரது அதிரடி முச்சதத்தால் பெங்கால் 7 விக்கெட் இழப்பிற்கு 635 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இமாலய இலக்கை நோக்கி ஜதராபாத் களமிரங்க உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 15042025
Today Live 14042025
Madurai MP Su Venkatesan
Harris Jayaraj
Nellai Palayamkottai 8th student
MK Stalin
sanjiv goenka rishabh pant
Porkodi Armstrong