மொயீன் அலிக்கு இன்னும் விசா கிடைக்கவில்லை என்பதால் ஐபிஎல் முதல் போட்டியில் விளையாட மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2022 இன் முதல் போட்டியில் நான்கு முறை சாம்பியனான சென்னை மற்றும் கடந்த ஆண்டு ரன்னர்-அப் அணியான கொல்கத்தா ஆகிய அணிகளுக்கு வரும் சனிக்கிழமை வான்கடே மைதானத்தில் மோதுகிறது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மொயீன் அலி இல்லாமல் விளையாட உள்ளது. இதை சிஎஸ்கே சிஇஓ காசி விஸ்வநாதன் உறுதி செய்தார்.
மொயீன் அலி விளையாட முடியாது:
விசுவநாதன் கூறுகையில், மொயீன் அலி முதல் போட்டியில் விளையாட முடியாது என்பது உறுதி. அவருக்கு இன்னும் விசா கிடைக்கவில்லை. இதற்கான முயற்சிகளை நாங்களும் பிசிசிஐயும் (இந்திய கிரிக்கெட் வாரியம்) மேற்கொண்டு வருகிறோம். இன்னும் ஓரிரு நாட்களில் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும் என நம்புகிறோம். அவர் இன்னும் அணியில் சேராதது ஏமாற்றம் அளிக்கிறது. நாளை விசா கிடைத்தாலும், அவரால் முதல் போட்டியில் விளையாட முடியாது என்றார்.
தக்கவைக்கப்பட்ட மொயின் அலி:
மொயின் அலி ஐபிஎல் ஏலத்திற்கு முன்பே தக்கவைக்கப்பட்டது. சென்னை கோப்பையை வெல்ல மொயீன் அலி முக்கிய பங்கு வகித்தார். ஐபிஎல் 2021ல் சென்னை அணிக்காக அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளார். அவர் 15 இன்னிங்ஸ்களில் 357 ரன்கள் எடுத்தார். மொயீன் அலி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.
மும்பை : ஐபிஎல் தொடர் மார்ச் 22-ம் தேதி அன்று தொடங்கியது, 12 ஆவது போட்டியில் மும்பை மற்றும் கொல்கத்தா…
சென்னை : விழுப்புரம் திரௌபதி அம்மன் கோயில் திறப்பு தொடர்பாக கடந்த சில மாதங்களாக சர்ச்சைகள் எழுந்தது. இந்த கோயில்,…
சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இன்னும் ஓராண்டுகள் உள்ள நிலையில், தற்போதே தமிழக அரசியல் களத்தில் பரபரப்பு…
குவஹாத்தி : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை அணியும், ராஜஸ்தான் அணியும் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற…
சென்னை : தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் ரமலான் பண்டிகை உற்சாக கொண்டாடப்பட்டு வருகிறது. நேற்று பிறை தெரிந்த நிலையில், இன்று ரமலான்…
சென்னை : தமிழ் சினிமா மட்டுமின்றி இப்போது இந்திய சினிமா வரை அனைவருடைய கவனம் முழுவதும் அஜித் நடிப்பில் உருவாகி வரும்…