உணர்ச்சி பொங்க கண்ணீர் வடித்த முகமது சிராஜ்.! இணையத்தில் பலரும் ஆதரவு.!

Published by
பாலா கலியமூர்த்தி

இந்திய நாட்டு தேசிய கீதம் ஒலிக்கும்போது, வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் உணர்ச்சி பொங்க கண்ணீர் விட்டார்.

ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி ஒருநாள், டி-20, டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகள் முடிவடைந்ததை தொடர்ந்து, நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை விளையாடி வருகிறது. அதில், முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணியும், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியும் வென்று சமநிலையில் உள்ளன.

இந்நிலையில், மூன்றாவது டெஸ்ட் போட்டி இன்று சிட்னி மைதானத்தில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனிடையே, இப்போட்டி தொடங்கும் முன் இரு நாட்டு அணிகளின் தேசிய கீதம் போடப்பட்டது. இந்திய நாட்டு தேசிய கீதம் ஒலிக்கும்போது, வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் உணர்ச்சி பொங்க கண்ணீர் விட்டார். அவரால் அழுகையை அடக்க முடியாமல் கண்களில் இருந்து கண்ணீர் வடிந்தது.

இந்த காட்சி இணையத்தில் வைரலாகி, சிராஜிக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் இந்திய ரசிகர்கள் என பலரும் ஆதரவாக பலரும் பதிவிட்டு வருகின்றனர். அந்தவகையில், இந்த படத்தை சிலர் நினைவில் வைத்திருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அவர் சிராஜ் முகமது. தேசிய கீதம் அவருக்கு முக்கியமானது என்று முன்னாள் வீரர் முகமது கயிப் தெரிவித்துள்ளார். சிராஜ் இந்திய அணிக்காக ஒரு ஒருநாள் ஆட்டத்திலும், 3 டி20 போட்டியிலும் விளையாடியுள்ளார். ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்காக விளையாடி வருகிறார்.

சிராஜின் தந்தை நுரையீரல் பாதிப்பு காரணமாக கடந்த வருடம் நவம்பர் மாதம் காலமானார். அப்போது, ஆஸ்திரேலியாவில் இருந்த சிராஜ், தந்தையின் இறுதி சடங்கில் கூட பங்கேற்க முடியவில்லை. கிரிக்கெட் விளையாடினால் தான் அப்பாவுக்கு பிடிக்கும். இந்த தொடரில் நான் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்தியாவை வெற்றி பெற செய்து, அந்த வெற்றியை அப்பாவுக்கு அஞ்சலியாக செலுத்துவேன் என சிராஜ் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு ஜில் ஜில்..! கனமழை அலர்ட் கொடுத்த வானிலை மையம்!

தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு ஜில் ஜில்..! கனமழை அலர்ட் கொடுத்த வானிலை மையம்!

சென்னை : கோடைகாலம் தொடங்கவுள்ள நிலையில், இப்போதே வெயிலின் தாக்கம் தொடங்கிவிட்டது. இந்த நேரத்தில் மழை பெய்தால் நன்றாக இருக்கும் என…

4 minutes ago

பேவாட்ச் தொடரின் பிரபலம் பாமெலா பாக் தற்கொலை! அதிர்ச்சியில் ஆழ்ந்த ஹாலிவுட் சினிமா!

ஹில்ஸ் : பிரபலமான பேவாட்ச் (Baywatch) தொலைக்காட்சி தொடரில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் அமெரிக்கன் நடிகை பாமெலா பாக் (Pamela…

15 minutes ago

விண்ணில் வெடித்து சிதறிய மஸ்கின் ஸ்டார்ஷிப் ராக்கெட்!

டெக்சாஸ் : உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் நேற்று ஸ்டார்ஷிப் 8 விண்கலத்தை விண்ணில் ஏவியது.…

38 minutes ago

தமிழகத்தில் இதை செய்யுங்கள்! முதல்வர் ஸ்டாலினுக்கு வேண்டுகோள் வைத்த அமித்ஷா!

சென்னை : இன்று ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே தக்கோலத்தில் உள்ள சி.ஐ.எஸ்.எஃப் பயிற்சி மையத்தில் சி.ஐ.எஸ்.எஃப் 56வது ஆண்டு விழா…

4 hours ago

CISF 56-வது ஆண்டுவிழா…6,553 கி.மீ சைக்கிள் பயணத்தை தொடங்கி வைத்த அமித்ஷா!

சென்னை : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அரக்கோணம் அருகே தக்கோலத்தில் நடைபெறும் சி.ஐ.எஸ்.எஃப் 56வது ஆண்டு விழாவில் கலந்து…

4 hours ago

Live : CISF-ன் 56வது ஆண்டுவிழா முதல்…, தமிழகத்தில் மும்மொழி கொள்கை விவகாரம் வரை..,

சென்னை : விமான நிலையங்கள், துறைமுகங்கள், பல்வேறு தனிநபர் பிரமுகர்கள் என பல்வேறு பாதுகாப்பு பணிகளில் ஈடுபடும் மத்திய தொழிலாக…

4 hours ago