எந்த பந்துவீச்சாளர் வந்தாலும் விராட் கோலியை தடுக்க முடியாது! புகழ்ந்து தள்ளிய முன்னாள் வீரர்!

Published by
பால முருகன்

சென்னை : விராட் கோலி பார்மை எந்த பந்துவீச்சாளர் வந்தாலும் தடுக்க முடியாது என முகமது கைஃப் தெரிவித்துள்ளார்.

மே 18-ஆம் தேதி பெங்களூர் சின்ன சாமி மைதானத்தில் நடைபெறவுள்ள போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும், மோதுகிறது. ஏற்கனவே, இந்த சீசனில் கொல்கத்தா, ராஐஸ்தான், ஹைதராபாத் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறிவிட்ட நிலையில் 4-வதாக பெங்களூர் அணி செல்லுமா அல்லது சென்னை அணி செல்லுமா என்ற எதிர்பார்ப்பும் அதிகமாகி இருக்கிறது.

இந்த நிலையில், வீராட் கோலி பார்ம் குறித்தும் சென்னை உடன் பெங்களூர் அணி  விளையாடும் அந்த முக்கியமான போட்டி பற்றியும் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது கைஃப் பேசியுள்ளார். இது குறித்து ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் நடந்த நிகழ்ச்சியில்  பேசிய அவர் “என்னை பொறுத்தவரையில் விராட் கோலி கட்டுப்படுத்த முடியாத ஒரு பார்மில் இருப்பதாக நான் நினைக்கிறேன். அவர் போட்டிகள் விளையாடும்போதும் எதுவும் அவரது கவனத்தை சிதறடிக்க முடியாது என்று கூறுவேன்.

ஏனென்றால், மைதானத்தில் இருந்து பெரிய சத்தம் வந்தாலும், யாராவது கத்தினாலும், அழுதாலும் அதெல்லாம் பற்றி அவர் கண்டுகொள்ளாமல் விளையாட்டை மட்டும் கவனம் செலுத்தி விளையாடி கொண்டு இருக்கிறார். அதைப்போல அணி எத்தனை ரன்கள் குவித்துள்ளது நாம் எவ்வளவு ரன்கள் எடுத்துள்ளோம் என்பதை எல்லாம் பார்க்கவே மாட்டிக்கிறார். அவருடைய முழு கவனம் சரியாக விளையாடி நமது உழைப்பை கொடுக்கவேண்டும் என்று தான் யோசிக்கிறார்.

வேகப்பந்து வீச்சாளராக இருந்தாலும் சரி, சுழற்பந்து வீச்சாளராக இருந்தாலும் சரி, எந்தப் பந்து வீச்சாளராக இருந்தாலும் சரி, விராட் கோலி இப்போது இருக்கும் பார்மை தடுக்க முடியாது என்று நான் கூறுவேன். அணியை வெற்றி பெற்றால் மட்டுமே திருப்தி அடைவேன் என்ற ஆவேசத்துடன் இப்போது விளையாடி கொண்டு இருக்கிறார். சென்னைக்கு எதிரான முதல் போட்டியில் ஆடும்போது விராட் கோலி சீக்கிரமே அவுட் ஆனார். ஆனால், இரண்டாவது முறை அது நடக்காது என்று நினைக்கிறன்” எனவும் முகமது கைஃப் கூறிள்ளார்.

Published by
பால முருகன்

Recent Posts

காற்று மாசுபாட்டை குறைக்க டெல்லி அரசின் ஐடியா.! வீதி வீதியாய் வரும் வாகனம்…

டெல்லி :  தலைநகர் டெல்லியின் மிகப் பெரும் பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது காற்று மாசு. கடந்த சில ஆண்டுகளாக இதனை…

13 seconds ago

ஐபிஎல் 2025 : கேப்டன் பொறுப்பிலிருந்து வெளியேறுகிறார் ‘ரிஷப் பண்ட்’? காரணம் இதுதான்!

சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறப் போகும் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விரைவில் நடைபெற இருக்கிறது. இதற்கான தீவிர…

22 mins ago

துலாபார வழிபாடும் அதன் பலன்களும் ..!

சென்னை -துன்பங்களை துரத்தியடிக்கும் துலாபாரம் கொடுக்கும் முறை பற்றி இந்த ஆன்மீக செய்தி குறிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம். துலாபாரம்…

25 mins ago

ஆட்டத்தை ஆரம்பித்த விஜய்.! தவெக தொண்டர்களுக்கு அரசியல் பயிலகம் தொடக்கம்…

சென்னை : சினிமாவில் உச்சநட்சத்திரமாக இருந்து தற்போது அரசியல் களத்தில் இறங்கியுள்ள விஜய், தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை…

40 mins ago

கிடு கிடு உயர்வு! 58,000-த்தை நெருங்கும் தங்கம் விலை!

சென்னை : சென்னையில் ஆபரணத்தங்கம் விலை புதிய உச்சத்தை நாளுக்கு நாள் தொட்டு வருகிறது. அதன்படி, நேற்று சவரனுக்கு ரூ.57…

52 mins ago

பருப்பு விவகாரம்., “பாஜகவின் ஆதாரமற்ற குற்றசாட்டு.!” தமிழக அரசு வெளியிட்ட விளக்க அறிக்கை..,

சென்னை : தமிழக ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு சரிவர கிடைக்கப்பெறவில்லை என்றும், கடந்த 6 மாதங்களாக சரிவர கிடைக்காமல்…

1 hour ago