டெல்லி : 17 வருடங்களுக்கு பிறகு 2024 ஆண்டிற்கான டி20 உலகக்கோப்பை தொடரை கைப்பற்றிய இந்திய அணி இன்று காலை டெல்லியில் வந்து தரை இறங்கினார்கள். இன்று காலை முதல் இந்திய ரசிகர்கள் நம் இந்திய வீரர்களுக்கு கொடுத்த வரவேற்பு மறக்க முடியாத ஒரு தருணமாகவே அமைந்துள்ளது என்று கூறலாம்.
அதன்பிறகு 11 மணி போல இந்திய அணி வீரர்கள் பிரதமர் நரேந்திர மோடியின் வீட்டிற்கு சென்றனர். அங்கு மோடி, வெற்றி பெற்ற இந்திய வீரர்களை அவர் வாழ்த்தி, வரவேற்று காலை விருந்தை கொடுத்தார். அதன் பிறகு, இந்திய அணி வீரர்களுடன் சேர்ந்து அமர்ந்து கலகலப்பாக பேசி விட்டு, பின் அவர்களுடன் இணைந்து புகைப்படங்கள் எடுத்துக்கொண்டார்.
இது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியும் வருகிறது. அது வீடியோவில் இந்திய அணியின் கேப்டனான ரோஹித் ஷர்மாவும், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரான ராகுல் ட்ராவிடும் இணைந்து அவரது கையில் கோப்பையை கொடுப்பார்கள். அப்போது மோடி அதை தனியாக வாங்கிக்கொள்ள மாட்டார்.
அவர் கோப்பையை ஏந்திய இருவரின் கையின் அடியில், அவரது கையை வைத்து புகைப்படம் எடுத்துகொள்ளவார். மேலும், இந்தியா அணியுடன் அமர்ந்து பேசுவார். கடந்த நடைபெற்ற 50 ஓவர் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி இறுதி போட்டி வரை வந்து ஆஸ்திரேலிய அணியுடன் தோல்வியை தழுவி வெளியேறியது.
அப்போதும் நரேந்திர மோடி இந்தியா அணியை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். அந்த வீடியோவும் அப்போது வைரலாக பரவியது. இதனை தொடர்ந்து 5 மணி அளவில் வெற்றி பெற்ற இந்திய அணி, மும்பையில் உள்ள விமான நிலையத்திலிருந்து வான்கடே மைதானம் வரை திறந்த வெளி பேருந்தில் வெற்றி ஊர்வலம் செல்லவுள்ளனர். அதற்கான ஏற்பாடுகளும் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ஷார்ஜா : நடைபெற்று வரும் டி20 உலககோப்பைத் தொடரின் இன்றைய போட்டியில் வங்கதேச மகளிர் அணியும், இங்கிலாந்து மகளிர் அணியும்…
ஷார்ஜா : நடைபெற்று வரும் மகளிர் டி20 உலகக்கோப்பைத் தொடரின் 5-வது போட்டியான இன்று ஆஸ்திரேலிய மகளிர் அணியும், இலங்கை…
சென்னை : தெரியாத சில நம்பர்களிலிருந்து அடிக்கடி போன் வந்து அதன் மூலம் மர்ம நபர்கள் பண மோசடி, செய்யும்…
சென்னை : காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் சாம்சங் இந்தியா எனும் தனியார் எலக்ட்ரானிக் உற்பத்தி தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த…
இஸ்ரேல் : லெபனான் மீதான தரை மற்றும் வான் வழி தாக்குதல்களை இஸ்ரேல் தொடர்ந்து தீவிரப்படுத்தி வருகிறது. தலைநகர் பெய்ரூட்…
சென்னை-நவராத்திரியின் நான்காவது நாள் பூஜை முறை ,நேரம் ,கடன் தீர மஹாலட்சுமியை வழிபடும் முறை பற்றி இந்த ஆன்மீக செய்தி…