உலகக்கோப்பையுடன் மோடி …! வியப்பூட்டும் நிகழ்வுகள் .. வைரலாகும் புகைப்படங்கள்!

Published by
அகில் R

டெல்லி :  17 வருடங்களுக்கு பிறகு 2024 ஆண்டிற்கான டி20 உலகக்கோப்பை தொடரை கைப்பற்றிய இந்திய அணி இன்று காலை டெல்லியில் வந்து தரை இறங்கினார்கள். இன்று காலை முதல் இந்திய ரசிகர்கள் நம் இந்திய வீரர்களுக்கு கொடுத்த வரவேற்பு மறக்க முடியாத ஒரு தருணமாகவே அமைந்துள்ளது என்று கூறலாம்.

அதன்பிறகு 11 மணி போல இந்திய அணி வீரர்கள் பிரதமர் நரேந்திர மோடியின் வீட்டிற்கு சென்றனர். அங்கு மோடி, வெற்றி பெற்ற இந்திய வீரர்களை அவர் வாழ்த்தி, வரவேற்று காலை விருந்தை கொடுத்தார். அதன் பிறகு, இந்திய அணி வீரர்களுடன் சேர்ந்து அமர்ந்து கலகலப்பாக பேசி விட்டு, பின் அவர்களுடன் இணைந்து புகைப்படங்கள் எடுத்துக்கொண்டார்.

Narendra Modi with Victory Team India [file image]
இது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியும் வருகிறது. அது வீடியோவில் இந்திய அணியின் கேப்டனான ரோஹித் ஷர்மாவும், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரான ராகுல் ட்ராவிடும் இணைந்து அவரது கையில் கோப்பையை கொடுப்பார்கள். அப்போது மோடி அதை தனியாக வாங்கிக்கொள்ள மாட்டார்.

அவர் கோப்பையை ஏந்திய இருவரின் கையின் அடியில், அவரது கையை வைத்து புகைப்படம் எடுத்துகொள்ளவார். மேலும், இந்தியா அணியுடன் அமர்ந்து பேசுவார். கடந்த நடைபெற்ற 50 ஓவர் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி இறுதி போட்டி வரை வந்து ஆஸ்திரேலிய அணியுடன் தோல்வியை தழுவி வெளியேறியது.

Narendra Modi with ICC T20 Worldcup & Team India [file image]
அப்போதும் நரேந்திர மோடி இந்தியா அணியை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். அந்த வீடியோவும் அப்போது வைரலாக பரவியது. இதனை தொடர்ந்து 5 மணி அளவில் வெற்றி பெற்ற இந்திய அணி, மும்பையில் உள்ள விமான நிலையத்திலிருந்து வான்கடே மைதானம் வரை திறந்த வெளி பேருந்தில் வெற்றி ஊர்வலம் செல்லவுள்ளனர். அதற்கான ஏற்பாடுகளும் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Published by
அகில் R

Recent Posts

வங்கதேச அணியை பொட்டலம் செய்த இங்கிலாந்து மகளிர் அணி! தொடரின் முதல் வெற்றியைப் பெற்று அசத்தல்!

ஷார்ஜா : நடைபெற்று வரும் டி20 உலககோப்பைத் தொடரின் இன்றைய போட்டியில் வங்கதேச மகளிர் அணியும், இங்கிலாந்து மகளிர் அணியும்…

18 hours ago

கெத்து காட்டிய பெத் மூனி ..! 6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்திய ஆஸ்திரேலிய மகளிர் அணி!

ஷார்ஜா : நடைபெற்று வரும் மகளிர் டி20 உலகக்கோப்பைத் தொடரின் 5-வது போட்டியான இன்று  ஆஸ்திரேலிய மகளிர் அணியும், இலங்கை…

22 hours ago

பணமோசடிக்கு செக் வைத்த பிஎஸ்என்எல்! ஏர்டெல், ஜியோவை ஓவர்டேக் செய்த புதிய அம்சம்!

சென்னை : தெரியாத சில நம்பர்களிலிருந்து அடிக்கடி போன் வந்து அதன் மூலம் மர்ம நபர்கள் பண மோசடி, செய்யும்…

22 hours ago

தீவிரமடையும் சாம்சங் ஊழியர்கள் போராட்டம்., அமைச்சர்களுக்கு உத்தரவிட்ட மு.க.ஸ்டாலின்.!

சென்னை : காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் சாம்சங் இந்தியா எனும் தனியார் எலக்ட்ரானிக் உற்பத்தி தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த…

23 hours ago

ஹெஸ்பொல்லா தலைவர் நஸ்ரல்லாவின் ‘வாரிசு’ இஸ்ரேல் வான்வழித் தாக்குதலில் பலி.?

இஸ்ரேல் : லெபனான் மீதான தரை மற்றும் வான் வழி தாக்குதல்களை இஸ்ரேல் தொடர்ந்து தீவிரப்படுத்தி வருகிறது. தலைநகர் பெய்ரூட்…

23 hours ago

நவராத்திரி நான்காம் நாள்.! வீட்டில் செல்வம் பெருக மகாலட்சுமி தேவியை வழிபடும் முறை..!

சென்னை-நவராத்திரியின் நான்காவது நாள் பூஜை முறை ,நேரம் ,கடன் தீர மஹாலட்சுமியை வழிபடும் முறை பற்றி இந்த ஆன்மீக செய்தி…

23 hours ago