மும்பை அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ அணி 199 ரன்கள் குவிப்பு.
ஐபிஎல் தொடரின் இன்றை 26-வது லீக் போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், கேஎல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் பலப்பரீட்சை செய்து வருகிறது. மும்பையில் உள்ள பிரபோர்ன் மைதானத்தி பிற்பகல் தொடங்கிய இப்போட்டியில் மும்பை அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய லக்னோ அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான கேப்டன் கேஎல் ராகுல், குயின்டன் டி காக் சிறப்பாக விளையாடி வந்த நிலையில், டி காக் 24 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
இவரைத்தொடர்ந்து வந்த மணீஷ் பாண்டே சற்று நிதானமாக விளையாடி 38 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழக்க, ஒருபக்கம் அதிரடியாக விளையாடிய கேஎல் ராகுல் தனது அரைசதத்தை பூர்த்தி செய்தார். இதனிடையே, சென்ற போட்டியில் அதிரடியாக விளையாடிய மார்கஸ் ஸ்டோனிஸஸும் சொற்ப ரன்களில் வெளியேற சிறப்பாக விளையாடி வந்த கேப்டன் கேஎல் ராகுல் 56 பந்துகளில் 101 ரன்கள் எடுத்து தனது சத்தத்தை அதிரடியாக பூர்த்தி செய்தார். இறுதியாக லக்னோ அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 199 ரன்களை எடுத்துள்ளது.
அதிகபட்சமாக ராகுல் 60 பந்துகளில் 103 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழக்காமல் இறுதிவரை களத்தில் இருந்தார். அதுமட்டுமில்லாமல் மும்பை அணிக்கு எதிராக 2வது சதம் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை கொள்கிறார் கேஎல் ராகுல் மும்பை அணி பந்துவீச்சை பொறுத்தளவில் ஜெய்தேவ் உனத்கட் 2, முருகன் அஸ்வின், ஃபேபியன் ஆலன் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர். இந்த நிலையில், மும்பை அணிக்கு 200 ரன்களை வெற்றி இலக்காக லக்னோ அணி நிர்ணயம் செய்துள்ளது. எனவே, தொடர் தோல்வியில் இருந்து மும்பை மீளுமா?, இந்தாண்டு ஐபிஎல் தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்யுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
சென்னை : இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜனவரி 6, 2025 அன்று ஆளுநரின் உரையுடன் தொடங்கிய நிலையில்,…
மும்பை : நேற்றைய ஆட்டத்தில் கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் எளிதாக வென்று, நடப்பு ஐபிஎல் சீசனில் முதல் வெற்றியை மும்பை…
மலேசியா : தலைநகர் கோலாலம்பூருக்கு அருகே உள்ள புறநகர்ப் பகுதியான புத்ரா ஹைட்ஸில் (Putra Heights), செலங்கோர் மாநிலத்தில், பெட்ரோனாஸ்…
சென்னை : தமிழ்நாட்டில் தெருநாய்க்கடி சம்பவங்கள் என்பது சமீப ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்து வருகின்றன, உதாரணமாக சொல்லவேண்டும் என்றால், இந்த…
பர்ஹைட் : ஜார்க்கண்டின் சாஹேப்கஞ்ச் மாவட்டத்தின் பர்ஹைட் என்கிற பகுதியில் 2 சரக்கு ரயில்கள் நேருக்குநேர் மோதிய விபத்தில் 2…
சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டம் கடந்த மார்ச் 28ம் தேதி சென்னை திருவான்மியூர்ராமச்சந்திரா…