மிட்செல் மார்ஷுக்கு மாற்றாக ஜேசன் ராய் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இடம்பெற்றுள்ளார்.
இந்த வருடத்திற்கான ஐபிஎல் போட்டிகள் வரும் 9-ஆம் தேதி தொடங்கவுள்ளது. இதற்காக 8 அணி வீரர்களும் தீவிரமாக பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த வருட ஒட்டுமொத்த ஐபிஎல் போட்டிகளில் இருந்து விலகுவதாக மிட்செல் மார்ஷ் தெரிவித்தார்.
ஐபிஎல் போட்டி துவங்குவதற்கு முன் ஆஸ்திரேலியாவின் ஆல்ரவுண்டர் மிட்செல் மார்ஷ் ஐபிஎல் 2021-லிருந்து விலகியதால், டேவிட் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. சில காரணங்களால் மிட்செல் ஐபிஎல்லிலிருந்து விலகுவது இது முதல் முறை அல்ல. கடந்த ஆண்டு செப்டம்பரில் நடந்த ஐபிஎல்தொடரில் தொடக்க ஆட்டத்தின் போது மார்ஷ் காயம் ஏற்பட்டது.
பின்னர் காயம் காரணமாக முழு லீக்கிலும் இருந்து விலகினார். இந்நிலையில், மிட்செல் மார்ஷுக்கு பதிலாக ஜேசன் ராய் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். 2010 இல் ஐபிஎல்லில் அறிமுகமான மார்ஷ் மொத்தம் 21 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ளார். அவருக்குப் பதிலாக களமிறங்கும் ஜேசன் ராய் 2017 ஆம் ஆண்டில் குஜராத் லயன்ஸ் அணிக்காக ஐபிஎல் அறிமுகமானார்.
பின்னர் 2018 ஐபிஎல் தொடரில் டெல்லி அணியில் இடம்பெற்றார். அவர் மொத்தம் 8 போட்டிகளில் விளையாடியுள்ளார். அதில் ஒரு அரைசதத்துடன் 179 ரன்கள் எடுத்தார். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ராயை தனது அடிப்படை விலையான 2 கோடி ரூபாயில் வாங்கியுள்ளது.
ஆந்திரப்பிரதேசம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தனது 101வது ராக்கெட்டான PSLV-C61 ஐ மே 18 ஞாயிற்றுக்கிழமை…
புல்வாமா : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு…
சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…
ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…