#IPL2021: மீண்டும் இந்த தவறை செய்தால் எதிரணிக்கு கூடுதலாக 5 ரன்கள்.. டெல்லி அணியை எச்சரித்த நடுவர்!

Published by
Surya

ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த போட்டியில் டெல்லி அணி பந்துவீச்சின்போது அமித் மிஸ்ரா, பந்துவீசும்முன் தெரியாமல் பந்தில் எச்சில் தடவினார். இதனால் டெல்லி அணிக்கு முதல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த 22-ம் போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதியது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி, 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்தது.

172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது. இதில் தொடக்க ஆட்டக்காரர்கள் விரைவில் வெளியேற, அவர்களையடுத்து களமிறங்கிய பண்ட் – ஹெட்மயர் கூட்டணி அதிரடியாக ஆடினார்கள். இறுதிவரை போராடிய டெல்லி அணி, 1 ரன் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இந்த போட்டியில் டெல்லி அணி பந்துவீச்சின்போது அமித் மிஸ்ரா, பந்துவீசும்முன் தெரியாமல் பந்தில் எச்சில் தடவினார்.

அதனை பார்த்த நடுவர் வீரேந்தர் சர்மா, டெல்லி அணி கேப்டன் ரிஷப் பண்டுக்கு முதல் எச்சரிக்கை விடுத்துள்ளார். மீண்டும் இதே தவறை செய்தால் எதிரணிக்கு 5 ரன்கள் கூடுதலாக வழங்கப்படும். கிரிக்கெட் விளையாட்டின்போது பந்து வீச்சாளர்கள், பந்து வீசுவதற்கு முன், எச்சிலால் பந்தில் தடவி வீசுவது வழக்கம். தற்பொழுது கொரோனா பரவல் காரணமாக ஐசிசி வெளியிட்ட புதிய விதிமுறைகளின் படி, பந்தில் எச்சில் தடவி பேட்டிங் அணிக்கு கூடுதலாக 5 ரன்கள் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

Published by
Surya

Recent Posts

இன்று சென்னை vs பஞ்சாப்.., சேப்பாக்கத்தில் விசில் பறக்குமா? பயிற்சியாளர் சொன்ன பாசிட்டிவ் தகவல்.!

இன்று சென்னை vs பஞ்சாப்.., சேப்பாக்கத்தில் விசில் பறக்குமா? பயிற்சியாளர் சொன்ன பாசிட்டிவ் தகவல்.!

சென்னை : ஐபிஎல்லின் இன்றைய லீக் போட்டியில் சென்னை, பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 7…

17 minutes ago

விசாகப்பட்டினத்தில் சுவர் இடிந்து விழுந்து விபத்து – 9 பேர் உயிரிழப்பு.!

விசாகப்பட்டினம் : ஆந்திராவின் விசாகப்பட்டினம் அருகே உள்ள சிம்மாச்சலம் ஸ்ரீ நரசிம்ம சுவாமி கோயில் சந்தன உற்சவ விழாவின்போது சுவர்…

1 hour ago

கடைசி வரை போராடிய டெல்லி….கடைசி நேரத்தில் த்ரில் வெற்றி பெற்ற கொல்கத்தா!

டெல்லி : இன்று டெல்லி அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட்…

9 hours ago

சாட்ஜிபிடியை ஓரம் கட்ட ஸ்கெட்ச் போட்ட மார்க் ஜுக்கர்பெர்க்! போட்டியில் களமிறங்கிய Meta AI ஆப்!

மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், இன்று (ஏப்ரல் 29, 2025) ஒரு புதிய Meta AI…

10 hours ago

திணறி கொண்டே அதிரடி காட்டிய கொல்கத்தா…டெல்லிக்கு வைத்த பெரிய டார்கெட்?

டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…

11 hours ago

“200 தொகுதிகளுக்கும் மேல் வெல்வோம்” தமிழிசைக்கு பதிலடி கொடுத்த மு.க.ஸ்டாலின்!

சென்னை : இன்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த போது திமுக குறித்து விமர்சனம் செய்து…

12 hours ago