ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி 5 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றிபெற்றவுள்ளது.
ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெற்ற 51-வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி, 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்கள் இழப்பிற்கு 177 ரன்கள் எடுத்தது. 178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக விருத்திமன் சஹா – ஷப்மன் கில் களமிறங்கினார்கள்.
மும்பை இந்தியன்ஸ் அணியை போலவே குஜராத் அணியும் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். அந்தவகையில் முருகன் அஸ்வின் வீசிய பந்தில் அரைசதம் விளாசிய ஷப்மன் கில் 52 ரன்களுக்கும், 55 ரன்கள் அடித்து விருத்திமன் சஹா தனது விக்கெட்டை இழந்தார். இவர்களைதொடர்ந்து களமிறங்கிய சாய் சுதர்சன் 14 ரன்களுக்கும், ஹர்திக் பாண்டியா 24 ரன்கள் எடுத்து தனது விக்கெட்டை இழந்தார்.
கடைசியாக 6 பந்துகளுக்கு 9 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், மும்பை அணி சார்பாக பந்துவீச டேனியல் சாம்ஸ் வந்தார். அதிரடியாக பந்துவீசிய அவர், ராகுல் தேவாதியாவின் விக்கெட்டை வீழ்த்தி, 3 ரன்கள் மட்டுமே கொடுத்து மும்பை அணியை வெற்றிபெற செய்துள்ளார். இந்த போட்டியின் மூலமாக மும்பை அணி, நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் தனது 2-வது வெற்றியை பதிவு செய்துள்ளது.
நாகர்கர்னூல் : தெலுங்கானா மாநிலம் நாகர்கர்னூல் மாவட்டத்தில் சுரங்கப்பாதை தோண்டும் வேலை நடைபெற்று வந்தது. கடந்த சனிக்கிழமை காலையில், டோமலபெண்டா…
சென்னை : சீமானின் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகும் நிர்வாகிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி கொன்டு இருப்பதை…
சென்னை : தங்கம் விலை கடந்த 53 நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.7,480 உயர்ந்துள்ளது. கடந்த டிச.31ஆம் தேதி 22…
ராமேஸ்வரம் : கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களை எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக கூறி, 32 பேரை இலங்கை…
சென்னை : தமிழகம் முழுவதும் 1,000 இடங்களில் 'முதல்வர் மருந்தகங்களை' முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார். இந்த…
கீவ் : உக்ரைனில் அமைதி திரும்ப தனது பதவியை விட்டுத்தர வேண்டும் என்றால் தயார் என்று அதிபர் ஜெலன்ஸ்கி அறிவித்துள்ளார்.…