#IPL2022: 12 ரன்கள் வித்தியாசத்தில் மீண்டும் மும்பை அணி தோல்வி!

Default Image

இன்றைய ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதிய நிலையில், மும்பை அணி மீண்டும் தோல்வி பெற்று புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்திலே நிலைத்து வருகிறது.

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 22-வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதியது. புனே MCA மைதானத்தில் தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி, 20 ஓவர்கள் முடிவில் 198 ரன்கள் எடுத்தது. 199 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் ஷர்மா – இஷாந்த் கிஷன் களமிறங்கினார்கள்.

தொடக்கத்தில் நிதானமாக ஆடிவந்த ரோஹித் சர்மா 28 ரன்கள் அடித்து தனது விக்கெட்டை இழக்க, மறுமுனையில் இருந்த இஷாந்த் கிஷன், 3 ரன்கள் மட்டுமே அடித்து வெளியேறினார். பின்னர் களமிறங்கிய தேவால் அதிரடியாக ஆடி 49 ரன்கள் குவித்து வெளியேற, மறுமுனையில் இருந்த திலக் வர்மா 36 ரன்கள் எடுத்து தனது விக்கெட்டை இழந்தார். அவரையடுத்து சூரியகுமார் யாதவ் களமிறங்க, தனது அதிரடியாக ஆட்டத்தை வெளிக்காட்ட ஆரமித்தார்.

அதிரடியாக ஆடிவந்த சூரியகுமார் யாதவ் 43 ரன்கள் அடிக்க, அவரையடுத்து களமிறங்கிய அனைவரும் சொற்ப ரன்களில் வெளியேறினார்கள். இறுதியாக மும்பை இந்தியன்ஸ் அணி, 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் எடுத்து 12 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இதன்மூலம் மும்பை அணி, புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்திலே இருந்து வருகிறது,

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்