ஜேமிசனின் செயல் குறித்து சமூகவலைதளங்களில் வைரலாகும் மீம்ஸ்..!

Published by
murugan

நேற்றைய போட்டியில் மைதானத்திற்கு வெளியே இருந்த பந்துவீச்சாளர் ஜேமிசன் அருகில் உள்ள பெண்ணை பார்த்து புன்னகை செய்த புகைப்படம் வைரலாகியுள்ளது.

நேற்றைய ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கே.கே.ஆர்) அணியும்,  ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்.சி.பி) அணியும் மோதியது. இப்போட்டியில் முதலில் இறங்கிய பெங்களூர் அணி 93 ரன்கள் எடுக்க பின்னர், களமிறங்கிய கொல்கத்தா 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியின் போது, ​​மைதானத்திற்கு வெளியே ஆர்சிபி அணியின் பந்துவீச்சாளர் ஜேமிசனின் செயல் குறித்து சமூகவலைதளங்களில் மீம்ஸ் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

மைதானத்திற்கு வெளியே அமர்ந்திருக்கும் பந்துவீச்சாளர் ஜேமிசன் அருகில் உள்ள பெண்ணை பார்த்து புன்னகை செய்து கொண்டு இருக்கிறார். இந்த புகைப்படம் எடுக்கப்பட்ட நேரத்தில், ஆர்சிபியின் ஸ்கோர் 54 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளாக இருந்தது. இந்த புகைப்படத்தில், ஜேமிசனைத் தவிர ஆர்சிபி அணியின் அனைத்து வீரர்களின் கவனமும் களத்தில் உள்ளது. அணியின் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கரும் இந்த புகைப்படத்தில் உள்ளார்.

இந்த புகைப்படத்தில் கேப்டன் விராட் கோலியின் முகம் போட்டியைப் பற்றிய கவலையை தெளிவாகக் காட்டுகிறது. இந்த போட்டியில் எட்டாவது இடத்தில் பேட்டிங் செய்ய வந்த ஜேமிசன் 4 ரன்கள் எடுத்த பிறகு ரன் அவுட் ஆனார். இந்திய அணியின் தமிழக சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை தோல்வியடைய  முக்கிய பங்கு வகித்தார்.

வருண் சக்கரவர்த்தி 4 ஓவர்களில் 13 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். வருண் சக்கரவர்த்திக்கு முதல் முறையாக டி 20 உலகக் கோப்பையில் விளையாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது. வருண் சக்கரவர்த்தி டி 20 உலகக்கோப்பையில் எதிர் அணிகளுக்கு மிரட்டுவார் என கூறப்படுகிறது. இதுவரை டி20 சர்வதேச போட்டிகளில், வருண் சக்கரவர்த்தி 3 போட்டிகளில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதே நேரத்தில் அவர் 22 ஐபிஎல் போட்டிகளில் 28 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.

Published by
murugan

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

8 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

13 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

13 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

13 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

13 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

13 hours ago