இந்தியா-பாகிஸ்தான் டெஸ்ட் தொடரை நடத்த மெல்போர்ன் கிரிக்கெட் கிளப் விருப்பம்.!

Published by
Muthu Kumar

இந்தியா-பாகிஸ்தான் டெஸ்ட் தொடரை நடத்த மெல்போர்ன் கிரிக்கெட் கிளப் மற்றும் விக்டோரியா அரசாங்கமும் விருப்பம் தெரிவித்துள்ளது.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே டெஸ்ட் தொடரை நடத்த ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் கிரிக்கெட் கிளப் விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடைசியாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே 2007இல் டெஸ்ட் தொடர் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

டி-20 உலகக்கோப்பையில் மெல்போர்னில் நடைபெற்ற போட்டியில் இந்தியா- பாகிஸ்தான் ஆட்டத்தில் மைதானம் முழுதும் 90,293 ரசிகர்கள் வந்து பங்கேற்றனர், இதனையடுத்து மெல்போர்ன் கிரிக்கெட் கிளப் மற்றும் விக்டோரியா அரசாங்கம் இந்தியா-பாகிஸ்தான் டெஸ்ட் தொடரை நடத்த விருப்பம் தெரிவித்துள்ளது.

விக்டோரியா அரசாங்கம், இது குறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்திடமும் கோரிக்கை வைத்துள்ளோம், அவர்கள் ஐசிசி யிடம் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து இதனை நடத்த முயற்சிப்பார்கள் என்று நம்புகிறோம் என கூறியுள்ளதாக தகவல் வெளியானது.

2023 முதல் 2027 வரையிலான இந்தியாவின் போட்டி அட்டவணையில் பாகிஸ்தானுடன் எந்தவித கிரிக்கெட் தொடரும் அமைக்கப்படவில்லை, வரும் காலங்களில் அதாவது அடுத்த ஆண்டு, பாகிஸ்தானில் ஆசியக்கோப்பையும், இந்தியாவில் ஒருநாள் உலகக்கோப்பையும் நடக்கவிருக்கிறது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

11 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

12 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

12 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

13 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

13 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

13 hours ago