#IPL2022: நாளை ஹைதராபாத் – பஞ்சாப் அணிகள் மோதல்.. கடைசி போட்டியில் வெற்றிபெறப்போவது யார்?

Default Image

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் கடைசி லிக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதவுள்ளது. இந்த போட்டி, மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ளது.

2022-ம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்றது. அந்தவகையில் தற்பொழுது பிளே ஆப்ஸ் சுற்றுக்கு லக்னோ, குஜராத், ராஜஸ்தான், பெங்களூர் என நான்கு அணிகள் தேர்வான நிலையில், இன்று நடைபெறும் கடைசி லீக் போட்டியில் கேன் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், மயங்க அகர்வால் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதவுள்ளது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ள இந்த போட்டியில் இவ்விரு அணிகளும் ரசிகர்களுக்காக ஆடுகிறது.
அந்தவகையில் நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் இவ்விரு அணிகளும் 13 போட்டிகள் விளையாடியுள்ளது. அதில் பஞ்சாப் அணி 6 போட்டியில் வெற்றிபெற்றுள்ளது. அதேபோல ஹைதராபாத் அணியும் 6 போட்டியில் வெற்றிபெற்று பிளே ஆப்ஸ் வாய்ப்பை இழந்தது. இந்த போட்டி, நடப்பாண்டின் கடைசி போட்டி என்பதால் இரு அணிகளும் சிறப்பாக விளையாடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்