இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் மார்க் வூட் 3-வது டெஸ்ட் போட்டியில் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதுவரை 2 போட்டிகள் முடிந்த நிலையில், இந்திய அணி 2-வது போட்டியில் வெற்றி பெற்றதால் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. முதல் போட்டி டிராவில் முடிந்தது.
இந்நிலையில், இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் 3-வது டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் நடைபெறுகிறது. இப்போட்டியில் இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் மார்க் வூட் விளையாட மாட்டார் என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
அதில், 3வது டெஸ்டில் மார்க் உட் விளையாடமாட்டார் எனவும், 2-வது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டத்தின் போது மார்க் உட் காயமடைந்தார். 3-வது டெஸ்ட் போட்டி முடிவில் மார்க் வூட் உடல் திறன் பரிசோதனை செய்யப்படும் என தெரிவித்துள்ளது.
ஏற்கனவே ஸ்டூவர்ட் பிராட், ஜோஃப்ரா ஆர்ச்சர் மற்றும் கிறிஸ் வோக்ஸ் ஆகியோர் காயங்கள் காரணமாக தொடரில் விளையாடவில்லை. சமீபத்தில் பென் ஸ்டோக்ஸ் தனது மன நலனில் கவனம் செலுத்த காலவரையற்ற இடைவெளியை எடுத்து கொண்டார். தற்போது இங்கிலாந்து அணியில் மார்க் வூட் விளையாட வீரர்களின் பட்டியலில் சேர்ந்துள்ளார்.
சென்னை : ஏ.ஆர்.ரஹ்மான் திடீரென உடல்நிலை சரியில்லாமல் இன்று காலை 7:30 மணியளவில் நெஞ்சு வலி காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில்…
சென்னை : தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணாமாக, தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…
பாகிஸ்தான் :பலுசிஸ்தான் விடுதலைப் படை (Baloch Liberation Army - BLA) பாகிஸ்தானின் நோஷ்கி பகுதியில் பாகிஸ்தான் ராணுவப் படைகளின்…
ஏடன்: அமெரிக்கா ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது பெரிய அளவிலான தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்…
சென்னை : திடீர் உடல்நலக்குறைவால் ஏ.ஆர்.ரகுமான் சென்னை அப்போலோவில் இன்று காலை அனுமதிக்கப்பட்டார். இந்த செய்தியை கேட்ட உடன் முதல்வர்…
சென்னை : டாஸ்மாக் முறைகேடு விவகாரம் தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமலாக்கத் துறை மார்ச் 6, 2025ல்…