இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் மார்க் வூட் 3-வது டெஸ்ட் போட்டியில் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதுவரை 2 போட்டிகள் முடிந்த நிலையில், இந்திய அணி 2-வது போட்டியில் வெற்றி பெற்றதால் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. முதல் போட்டி டிராவில் முடிந்தது.
இந்நிலையில், இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் 3-வது டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் நடைபெறுகிறது. இப்போட்டியில் இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் மார்க் வூட் விளையாட மாட்டார் என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
அதில், 3வது டெஸ்டில் மார்க் உட் விளையாடமாட்டார் எனவும், 2-வது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டத்தின் போது மார்க் உட் காயமடைந்தார். 3-வது டெஸ்ட் போட்டி முடிவில் மார்க் வூட் உடல் திறன் பரிசோதனை செய்யப்படும் என தெரிவித்துள்ளது.
ஏற்கனவே ஸ்டூவர்ட் பிராட், ஜோஃப்ரா ஆர்ச்சர் மற்றும் கிறிஸ் வோக்ஸ் ஆகியோர் காயங்கள் காரணமாக தொடரில் விளையாடவில்லை. சமீபத்தில் பென் ஸ்டோக்ஸ் தனது மன நலனில் கவனம் செலுத்த காலவரையற்ற இடைவெளியை எடுத்து கொண்டார். தற்போது இங்கிலாந்து அணியில் மார்க் வூட் விளையாட வீரர்களின் பட்டியலில் சேர்ந்துள்ளார்.
சென்னை : தமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுத்து அடுத்ததாக ஒரு சில தோல்வி படங்களை கொடுத்து அடையாளம் தெரியாத…
டெல்லி : மாநிலத்தில் உள்ள 70 தொகுதிகளுக்கும் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த…
கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள்…
ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. ஆளும் திமுக கட்சியினர் வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை எதிர்த்து…
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டி நாளை ( பிப்ரவரி 9) -ஆம் தேதி ஒடிஷா…
ஒடிசா : இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி தங்களது சொந்த மண்ணில் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட…