கொல்கத்தாவில் வீரர்களுக்கு அனுமதி மறுப்பு..காரணம் கங்குலி-மம்தா மோதலா??

Published by
kavitha

இந்தியா-தென்ஆப்ரிக்க அணிகள் விளையாடும் தொடர் ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் பி.சி.சி.ஐ., தலைவர் கங்குலி இடையே உரசல் ஏற்பட்டுள்ளதாக  தெரிவிகிறது.

Image result for mamtha benarji southafrica playerஇந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டதென் ஆப்ரிக்க அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்க இருந்த நிலையில் முதல் போட்டி மழையால் ரத்தாகியது.இந்நிலையில் அடுத்த 2 போட்டிகள் கொரோனா வைரஸ் அச்சத்தில் கைவிடப்பட்ட நிலையில். வழக்கமான அட்டவணைப்படி தென் ஆப்ரிக்க வீரர்கள் கோல்கத்தாவில் நடக்க இருந்த 3வது போட்டிக்குப் பின்னரே அதாவது மார்ச் 18 தங்களது நாட்டிற்கு திரும்ப இருந்தனர். இதனிடையே கோல்கத்தாவில் நடைபெற இருந்த போட்டியை   பிசிசிஐ ரத்து செய்தது குறித்து, கொல்கத்தா போலீசாருக்கு முறைப்படி தகவல் எதுவும் தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது.

இந்த நிலையில் மேற்கு வங்கத்தின் முதல்வர் மம்தா பானர்ஜி இது குறித்து கூறுகையில்,கோல்கத்தாவில் போட்டி நடத்த வேண்டாம் என்று நாங்கள் உத்தர எதுவும் போட வில்லை. நீங்களாக  ஒரு முடிவு எடுத்துக் கொண்டால் எப்படி நன்றாக இருக்கும்.

மேலும் பேசிய அவர் நண்பர் கங்குலியுடனான நட்பு எல்லாம் சரி தான்.ஆனால் எங்களிடம் இது குறித்து ஒருவார்த்தை சொல்லியிருக்க வேண்டும். இங்கு நடத்த திட்டமிட்ட நிலையில் தலைமை செயலர், உள்துறை செயலர் அல்லது போலீஸ் கமிஷனர் அல்லது அரசாங்கத்தில் யாரோ ஒருவரிடம் ரத்து தொடர்பாக சொல்லியிருக்கலாம். என்று கூறியிருந்தார்.

இவ்வாறு முதல்வர் பேசிய நிலையில் கோல்கட்டா வந்து இறங்கிய தென் ஆப்ரிக்க அணி வீரர்களுக்கு, இங்குள்ள சிட்டி சென்டரில் அனுமதி மறுக்கப்பட்டது.அனுமதி மறுக்கப்பட்டதற்கு இதற்கு, மம்தா-கங்குலி மோதலா? அல்லது வேறு எதுவும் காரணமாக என்று தெரியவில்லை. வந்த இறங்கிய வீரர்களை  யாரும் கண்டுகொள்ளாததால், கோல்கத்தா விமான நிலையம் அருகில்  உள்ள ராஜார்ஹட் ஓட்டலில் தென் ஆப்ரிக்க வீரர்கள் தங்கினர்.இந்நிலையில்  ஒருநாள் முன்பாகவே வீரர்கள்  நேற்றே  தங்களது தாயகம் கிளம்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.
Published by
kavitha

Recent Posts

அப்பா என் பாட்டு எப்படி இருக்கு.. மாரி செல்வராஜ்-க்கு டஃப் கொடுத்த அவரின் குட்டி வாண்டு.!

சென்னை: வாழை படம் வெளியாகி உலக அளவில் மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்துள்ள நிலையில், அந்த படத்தில் வெளியான பாடல்களும் ரசிகர்கள்…

27 seconds ago

“அவருக்கு துளிகூட பயம் இல்லை” ! ரிஷப் பண்ட்டை புகழ்ந்த ஆடம் கில்கிறிஸ்ட்!

சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில்…

21 mins ago

“அதிமுக மீண்டு வரவேண்டும்” உதயநிதி விருப்பம்.!

சென்னை : தேர்தல் 2024 மீளும் 'மக்கள்' ஆட்சி' என்ற புத்தக வெளியீட்டு சென்னையில் விழா நடைபெற்றது. அந்த விழாவில்…

21 mins ago

3 நாள் பயணமாக அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார் பிரதமர் மோடி.!

டெல்லி : குவாட் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று அதிகாலை அமெரிக்கா புறப்பட்டு சென்றார். 3 நாள் அரசுமுறைப்…

33 mins ago

திருப்பதி லட்டுக்களில் மிருக கொழுப்புகள்.? திண்டுக்கல்லில் மத்திய ஆய்வு குழு.!

திண்டுக்கல் : ஆந்திரப் பிரதேசம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுக்களில் மிருக கொழுப்பு கலந்திருந்ததாக அம்மாநில முதலமைச்சர்…

1 hour ago

புதிய உச்சத்தை தொட்டது தங்கம் விலை… சவரனுக்கு ரூ.600 உயர்வு.!

சென்னை : தங்கம் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.600 அதிகரித்துள்ளது. சென்னையில் நேற்று 1 கிராம் தங்கம் ரூ.6,885க்கும்,…

1 hour ago