இது ஒரு நீண்ட பயணம் என்றும், நான் மிகவும் வயதாகி விட்டதாக உணர்வதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தல தோனி தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் கடந்த 2008-ம் ஆண்டு முதலே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக பதவி வகிப்பவர், தல தோனி. இவர் 2020-ம் ஆண்டில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்தார். அவர் ஓய்வு பெரும் செய்தி, ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியது. அவரின் விளையாட்டை இனி ஐபிஎல் தொடரில் மட்டுமே காணமுடியும் என்று ரசிகர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில் 39 வயதாகும் தல தோனி, சென்னை அணிக்காக மிகச் சிறந்த கேப்டனாகவும், விக்கெட் கீப்பராகவும், பேட்ஸ்மேனாகவும் இருந்து வருகிறார். நேற்று முன்தினம் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் தோனி தனது 200-வது போட்டியில் விளையாடினார். அப்பொழுது பேசிய அவர், “இது ஒரு நீண்ட பயணம்.. நான் மிகவும் வயதாகி விட்டதாக உணர்கிறேன்” என்று கூறினார்.
மேலும், கடந்த 2008-ம் ஆண்டில் தொடங்கிய இந்த பயணம், மிக நீண்ட பயணம் என்று குறிப்பிட்ட தோனி, 200-வது போட்டியை மும்பை வான்கடே மைதானத்தில் விளையாடுவேன் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை என்று கூறினார். அதுமட்டுமின்றி, தோனியின் ஹெலிகாப்டர் ஷாட்- ஐ இந்தாண்டி ஐபிஎல் தொடரில் ரசிகர்கள் உட்பட அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…