இந்தியா vs இங்கிலாந்து: சிறந்த வீரராக என்னை மாற்றியது சென்னை அணி- சாம் கரண்!

Published by
Edison

சென்னை அணிக்காக விளையாடிய குறுகிய காலத்தில் சிறந்த வீரராக மாறியதாக இங்கிலாந்து வீரர் சாம் கரண் தெரிவித்துள்ளார்.

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்தாம் மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி, அஹமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதனைதொடர்ந்து டி-20 போட்டிகளும் தொடங்கவுள்ளது. இந்த டி-20 தொடரில் பங்கேற்க இங்கிலாந்து அணியின் அதிரடி இளம் வீரர் சாம் கரண், இந்தியா வந்தடைந்தார்.

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த சாம் கரண், கிரிக்கெட் குடும்பத்திலிருந்து வந்த இடது கை பேட்ஸ்மேன் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் ஆவார். இவர் ஒப்பனிங், ஃபினிஷிங் என அனைத்து விதத்திலும் சிறப்பாக விளையாடி வந்தார். இவர் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆடி வருகிறார். மேலும் சாம் கரண், இந்த T20 உலகக்கோப்பை ஆண்டில் ஒரு முக்கிய அடையாளத்தை உருவாக்க வேண்டும் என எதிர்பார்கிறார்.

சாம் கரண், 2019 ஆம் ஆண்டில் கிங்ஸ் XI பஞ்சாப் அணிக்காக விளையாடி  ஐபிஎல் தொடரில் தனது வெற்றியைப் பதிக்க ஆரம்பித்தார். பின்னர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, அவரை 2020 ஆம் ஆண்டு வாங்கியது. இவர் சென்னை அணிக்காக பவர் பிளே ஓவரில் விளையாடி, ரசிகர்கள் மத்தியில் அவருக்கென்று ஒரு இடத்தைப்  பிடித்தார். ஐக்கிய அரபு எமிரேட்ஸில் மூன்று முறை சாம்பியன்களுக்கான  சில இடங்களில்  ஒருவராக இருந்தார்.மேலும் தனது 20 வயதில் IPL போட்டிகளில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்த இளம் பந்து வீச்சாளர் என்ற சாதனையைப் பெற்றார்.

இந்நிலையில் சாம் கரண், “ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக விளையாடிய குறுகிய காலத்தில் சிறந்த வீரராக மாறினேன். மாறுபட்ட நிலைகளில், வெவேறு சவால்களை எதிர்கொண்டேன்” என தெரிவித்துள்ளார்.

Published by
Edison

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

2 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

3 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

4 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

4 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

4 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

5 hours ago